Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இறங்கின பஸ்லயே ஏத்தி விட்டுட்டாங்கப்பா...புலம்பும் பிக்பாஸ் பிரபலம் யாருன்னு பாருங்க
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக பணப்பெட்டி வருவதற்கு முன்பே வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள். ஆனால் இந்த முறை அப்படி வரவில்லை.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வெளியேறிய போட்டியாளர்களை விருந்தினர்களாக அழைக்கவில்லை என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அதற்கு பதிலாக தான் ஃபைனலுக்கு சென்ற போட்டியாளர்களுடன் போனில் பேசினார்கள்.
காற்றில் பறப்பதாய் உணர்கிறேன்... கோல்டன் க்ளோப் விருது பெற்ற முதல் தென் கொரிய நடிகர் குஷி!
மீண்டும் வந்த போட்டியாளர்கள்
இந்நிலையில் பிக்பாசில் இந்த வாரம் ஃபினாலே வாரம் என்பதால் போட்டியாளர்களும் மனம் திறந்து பேசி வருகிறார்கள். இதற்கிடையில் 101 வது நாள் எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் ப்ரோமோவில் சுருதி மற்றும் நாடியா சாங், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவருக்கும் வாழ்த்து கூறுகிறார்கள்.
மறுபடியும் முதல இருந்தா
இரண்டாவது ப்ரோமோவில் சிபி மற்றும் அபினய் வருகின்றனர். வீட்டிற்குள் நுழையும் போதே அபினய், ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்து விட்டோம் என்கிறார். அதற்கு சிபி, இறங்கின பஸ்லயே என்னை ஏத்தி விட்டுட்டாங்க என்கிறார். இருவரும் ரேடியோ ஜாக்கி போல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். இவர்களின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து பிரியங்கா உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் வெளியே வருகிறார்கள்.
மிமிக்ரிக்கு டைட்டில் வின்னரா
இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு, ராஜு ஒரே ஒரு நாள் மிமிக்ரி பண்ணி 100 நாட்களுக்கு சேர்த்து டைட்டில் வின் பண்ண போறார். 100 நாட்கள் கன்டென்ட் கொடுத்த நிரூப், பிரியங்கா வெறும் ஃபைனலிஸ்ட்ஸா மட்டும் தான் இருக்க போறாங்க. பிரியங்கா தான் நேர்மையாக விளையாடுகிறார். ஏன் இந்த அபினய்யை கூப்பிட்டீங்க. சிபியை மட்டும் கூப்பிட்டிருக்க வேண்டியது தான. சிபியை மீண்டும் வீட்டிற்குள் பார்க்க சந்தோஷமாக இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
Recommended Video
பிரியங்கா தான் தகுதியானவர்
டைட்டிலை வெல்ல பிரியங்கா தான் தகுதியானவர். பிரியங்காவிற்கு ஓட்டு போடுங்கள் என பிரியங்காவின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.