Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
யாரு ஓவர் ஆக்டிங்.. உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள்… அக்ஷராவை விளாசும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் அக்ஷரா, சிபியை ரொம்ப ஓவரா நடந்து கொண்டார் என கூறியிருந்தார்.
இந்த ப்ரோமோவை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ், அக்ஷரா நீதான் ஓவரா பண்ற என்று கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார்.
மூக்கை சிந்திட்டு அழுதுட்டு இருந்தாங்க.. அக்ஷராவை ஆக்ரோஷப்படுத்திய சிபி.. வேறலெவல் புரமோ!
பள்ளிக்கூட டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடைபெற்றது. இதில், சிபி வார்டனாகவும், ராஜூ, அபிஷேக் ஆசிரியர்களாகவும், மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாகவும் விளையாடினர். இந்த டாஸ்கின் போது அக்ஷராவிற்கும் சிபியும் நேருக்கு நேர் மோதிகொண்டனர். பாத் ரூமில் இருந்த பொருட்களை போட்டு உடைத்தார் அக்ஷரா.
நெட்டிசன்ஸ் விளாசல்
இதையடுத்து, இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் இந்த டாஸ்கில் சிபி ஓவர் ஆக்டிங் பண்ணமாதிரி இருந்தது என்று கூறினார். இதையடுத்து பேசிய சிபி, ஓவர் ஆக்டிங் பண்ணது அக்ஷராதான் சுட்டி குழந்தையா இல்லாமல் அழுதுட்டு இருந்தாங்க என்று கூறி மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை தொடங்கியது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அக்ஷ்ராவை விளாசி வருகின்றனர்.
சண்டை முடியாது
ஒரு நெட்டிசன்ஸ் 100 நாள் முடிஞ்சாலும் இவங்க சண்டை முடியாது போல என கருத்து பதிவிட்டுள்ளார்.
ஓவர் ஆக்டிங்
மற்றொரு நெட்டிசன்ஸ்,அக்ஷரா மட்டும் சிபி ய ஓவர் ஆக்டிங் னு சொன்ன சிபி அமைதியா இருக்கனும். அதுவே சிபி உன்ன பத்தி ஒன்னு சொன்னா ஏத்துக்காம சண்டைக்கு வாராது. என பதிவிட்டுள்ளார்.
பாடம் எடுத்த அக்ஷரா
நெட்டிசன்ஸ் ஒருவர், அக்சராவை பார்த்து மூஞ்சையும் முகரையும் பாரேன் என்று தாமரை பாசையில் பேசினால்தான் அக்சராவிற்கு பிடிக்கும் போல. பாவனியை திட்டும் தமிழ் எனக்கு பிடித்திருப்பதாக கூறிய இந்த அக்ஷரா தான் இப்ப பாடம் எடுக்காங்க. என பதிவிட்டுள்ளார்.
கண்ணாடியில் பாருங்க
ஓவர் ஆக்டிங் பற்றி பேசும் முன், அக்ஷரா உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். இந்த முறை சிபி அவருக்கு கொடுத்த டாஸ்கை அவர் சரியாக செய்தார். என பதிவிட்டுள்ளார்.
தேவை இல்லாமல் பேசாதே
மற்றொரு நெட்டிசன்ஸ் அழுது இருந்தானு தேவை இல்லமா பேசாதே. அடியே சூனியக்கார கிழவி, அக்ஷரா அத மட்டும்தானா நீ பண்ணா.வேற என்ன சொல்லுவன் அவன். நல்லா சைக்கோ கேரக்டரா எல்லாம் உள்ள கொண்டு போய் விட்டுருகனுங்க. என பதிவிட்டுள்ளார்.
அக்ஷராவா இருக்குமோ
மற்றொரு நெட்டிசன்ஸ், சிபி என்ன சொல்லனும்னு அக்ஷராதான் முடிவு பண்ணணும் என பதிவிட்டுள்ளார். இதுபோன்றுதான் கடந்த வாரம் முழுவதும் இசைவாணியை டார்க்கெட் செய்து ப்ரோமோ வெளியானது. தற்போது அந்த லிஸ்ட்டில் அக்ஷரா வந்துள்ளதால் அவர் தான் இந்த வாரம் வெளியேறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.