பிரியங்காவை கேள்வி கேட்ட நிரூப்.. இவ்வளவு நாள் மூளைய வாடகை விட்டு இருந்தியா ..நெட்டிசன்ஸ் செம கலாய்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் அடுத்தக்கட்ட போட்டி நடைபெறுகிறது. அதில், அமீர், சஞ்ஜீவ், சிபி போட்டியிடுகின்றனர்.
இந்த டாஸ்கிலிருந்து வெளியேற்றப்பட்ட நிரூப் பிரியங்கா மீது சரியான கோபத்தில் இருக்கிறார். இதனால், நேற்றிலிருந்தே பிரியங்காவை டார்க்கெட் செய்தே கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவிலும், பிரியங்காவை நிற்கவைத்து கேள்விகளை கேட்டு வருகிறார் நிரூப். இதனால், இணையத்தில் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது.

வளர்ந்து கெட்டவன்
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், நேத்து அவ்வளவு விவரமா பேசுறான் கேள்வி கேக்குறான் இந்த வளர்ந்து கெட்டவன் இவ்வளவு நாள் ஏன் மூளைய வாடகை விட்டு இருந்தான அவ வெளிய அனுப்பும் போது நிறைய பேசிருக்கலாம் பேசற டாஸ்க் லாஸ்ட்டா கொடுத்துட்டு மத்த டாஸ்க் எல்லாம் முன்னாடி கொடுத்துருந்தா டிக்கெட் டு ஃபினாலோ நிரூப் தான் வின் பண்ணிருப்பார். என பதிவிட்டுள்ளார்.

வாயால வடசுடுற
டேய் சஞ்சீவ்கு அந்த டிக்கெட் கொடுக்க வேணாம்டா அவன மக்கள் கிட்ட ஒரு தடவை அனுப்பி சேவ் ஆனா உள்ள வைங்கடா டேய் விஜய் டிவி. அவன சேவ் பண்ண தானே வாயால வட சுடுற போட்டி எல்லாம் குடுக்குறீங்க. புரிஞ்சி போச்சுடா உங்க தில்லு முல்லு. அவனுக்கு தான்டா லீஸ்ட் வோட் இந்த வீக். வெளியே அனுப்புங்க. என பதிவிட்டுள்ளார்.

டேஞ்சர் பண்றியே
மற்றொரு நெட்டிசன், பிக் பாஸ் டைட்டில், பிக் பாஸ் டைட்டில் வின்னர்னு கூட பார்க்காம.. இப்படி டார்கெட் பண்ணி டேஞ்சர் பண்றியே..உனக்கே இது நியாயமா நிரூப்? ஒரு பச்ச புள்ளைய போட்டு இப்படி துவம்சம் பண்றியேடா...ரொம்ப தப்புப்பா.. என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

நண்பன எதிரியா
பிரியங்காவை தொடர்ந்து கேள்வி கேட்டு வரும் நிரூப், கொஞ்ச நாளா உண்மைய பேசி நரியங்காவை கரைக்டா எக்ஸ்போஸ் பண்ணுறான். இதுக்கு தான் சொல்லுவாங்க நம்மல பத்தி எல்லாம் தெரிஞ்ச நண்பன எதிரியா ஆக்கிக்கக்கூடாதுனு. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











