அப்பாவை பார்த்ததே இல்லை… எல்லாமே அம்மா தான்.. கலங்கிய அமீர் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிய இன்னும் 4 வாரங்களே உள்ளது.
Recommended Video
இதனால் இதுநாள் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட, தற்போது பிக் பாஸை பார்த்து வருகின்றனர்.
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில் அமீர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து கூறியுள்ளார்.

அமீர்
பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த நிலையில்,டான்ஸ் மாஸ்டர் அமீர் வைல்டு கார்டு எண்டரி மூலம் களமிறங்கினார். அமீர் ஊட்டியில் ADS டான்ஸ் ஸ்கூலை நடத்தி வருகிறார். இவர் பிரபுதேவாவின் தீவிர ரசிகர் ஆவார்.

கடந்து வந்த பாதை
பிக் பாஸ் வீட்டில் முந்தைய போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்தும் இதற்கு முன்பே பேசிவிட்டனர். ஆனால், புதுவரவாக வந்த சஞ்சீவ் மற்றும் அமீர் தாங்கள் வாழ்க்கையில் சந்தித்த சுக துக்கங்களை இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.

அம்மாவின் கனவு
இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அமீர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசுகிறார். நான் இதுவரை என் அப்பாவை பார்த்ததே இல்லை, நான், என் அம்மா, என் அண்ணன் 3 பேர் மட்டும் தான். டான்ஸ் மாஸ்டர் ஆகவேண்டும் என்பது என் அம்மாவின் கனவு.

கதறி அழுதபடி
பிரபுதேவாவின் பாட்டு டிவியில் வந்தால் அதை பார்த்து ஆடுனு ஆடுனு சொல்லுவாங்க. லோக்கள் டிவியில டான்ஸ் ஆடும் போதே ஊர் முழுக்க அம்மா பெருமையா சொன்னாங்க...தமிழ் நாட்டில பெரிய சேனல், எவ்வளவு பெரிய ஷோல இருக்கேன் ஆனால் இப்போ என் அம்மா இல்லை என்று கதறி அழுதபடி கூறியுள்ளார்.

இன்றைய எபிசோடு
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் அக்ஷராவின் அம்மா மற்றும் அண்ணான் வருவதுபோல காட்டப்பட்டது . ஸோ இன்றைய எபிசோடு ரொம்ப உணர்ச்சிபூர்வமாக இருக்கும்போல.


Click it and Unblock the Notifications











