Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அம்மாவை கொலை பண்ணிட்டாங்க.. அமீர் கடந்து வந்த கண்ணீர் கதை!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிய இன்னும் 4 வாரங்களே உள்ளது.
Recommended Video
இதுநாள் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட, தற்போது பிக் பாஸை பார்த்து ரசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்ட போகிறது.
அமீர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து கண்ணீர் பல்க கூறினார்.
106 நாட்களும் நீ இருக்கணும்.. பிக் பாஸையே வீட்டுக்கு அழைத்த ராஜுவின் அம்மா.. சரியான சரவெடி!
அமீர்
பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்த நிலையில்,டான்ஸ் மாஸ்டர் அமீர் வைல்டு கார்டு என்டரி மூலம் களமிறங்கினார். அமீர் ஊட்டியில் ADS டான்ஸ் ஸ்கூலை நடத்தி வருகிறார். இவர் பிரபுதேவாவின் தீவிர ரசிகர் ஆவார்.
கடந்து வந்த பாதை
பிக் பாஸ் வீட்டில் முந்தைய போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்தும் இதற்கு முன்பே பேசிவிட்டனர். ஆனால், புதுவரவாக வந்த சஞ்சீவ் மற்றும் அமீர் தாங்கள் வாழ்க்கையில் சந்தித்த சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டனர். நேற்று சஞ்சீவ் தன் வாழ்க்கை பாதையை பகிர்ந்து கொண்டார்.
அம்மாவின் கனவு
அமீர் இன்று, தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். நான் இதுவரை என் அப்பாவை பார்த்ததே இல்லை, நான் ஒரு வயதாக இருக்கும் போதே அவர் இறந்து விட்டார். நான், என் அம்மா, என் அண்ணன் மட்டும் தான். டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது என் அம்மாவின் கனவாகவே இருந்தது. இதற்காக, மாசம் ஒரு படத்திற்கு அழைத்து செல்வார்கள் என்றார்.
ஆதரவு இல்லாமல்
அதன் பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என் அம்மா கொலை செய்யப்பட்டு விட்டார். பள்ளி பருவத்திலேயே சுடுகாட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கு யாருடைய ஆதரவும் இல்லாமல் அலைந்தேன் என்று கதறி அழுதார். அஷ்ரப் என்பவர் நான் என்னை தன் மகன் போல கவனித்து வருகிறார்.
அம்மாவின் ஆசை
எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்மியில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு பாதுகாப்புத்துறைக்கு படித்தேன் ஆனால் என்னால் தேர்வாக முடியவில்லை. சரி அம்மாவின் ஆசையை நிறைவேற்ற டான்ஸ் மாஸ்டராகி இருக்கிறேன் என்று கூறினார்.