Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீ பண்றதெல்லாம் பாத்தா.. அடிக்கணும் போல இருக்கு… தாமரைக்கு ரைடுவிட்ட ராஜு!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே ஜெயிப்பதற்கான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது அதில் நிரூப், பாவனி, தாமரை, ராஜு மற்றும் பிரியங்கா ஆகியோர் வெளியேறி உள்ளனர்.
அதன் பிறகு அமீர், சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் மட்டுமே போட்டியில் இருக்கின்றனர்.
அவர்கள் மூன்று பேர் பங்கேற்கும் கடைசி டாஸ்க் இன்று நடந்து வருகிறது. இதில், இன்றைய எபிசோடில் ராஜூ தாமரைக்கு சிலஅறிவுரைகளை கூறினார்.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது இந்த வாரம் தெரிந்து விடும்.. அது எப்படி தெரியுமா?
பிக் பாஸ்
பிக் பாஸ் வீடு பல பிரச்சினைகளை கடந்து தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கின் முதல் போட்டியிலேயே நிரூப் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, நடந்த முட்டை டாஸ்கில் அமீர் தாமரையின் முட்டைகளை ஒட்டுமொத்தமாக உடைத்துவிட்டார்.
புலம்பிய தாமரை
பிரியங்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அமீர் முட்டையை உடைத்ததால் கடுப்பான தாமரை பிரியங்காவுடன் மல்லுக்கட்டினார். இறுதியில் இருவருக்கும் அடிதடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தசண்டையை அடுத்து தாமரை ஒருவிதமான மன கலக்கத்துடனே இருந்தார். தனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று தனியாக அழுது புலம்பினார்.
ஏன் இப்படி பண்ற
வருண், அக்ஷரா சென்று விட்ட பிறகு தாமரை தற்போது தனியாகவே இருக்கிறார். இதனால், தாமரையை அழைத்துப்பேசிய, ராஜூ அவருக்கு சில அறிவுரைகளை கூறினார். நீ தனியா போய் உங்காருவது, தனியா அழுவதை பார்ப்பதற்கு கஷ்டமா இருக்கு என்றார் ராஜூ. வருண் , அக்ஷரா இல்லாததால் அனாதையாக இந்த வீட்டில் இருக்கேன்னு சொல்லியது குறித்து, தாமரைக்கு சரியான ரைடுவிட்டார்.
Recommended Video
அடிக்கணும் போல கோவம் வருது
இந்த வீட்டில் இருக்கும் சிலருக்கு உன்னை பிடிக்கும், அதுக்காக உன் கிட்ட வந்து பிடிக்கும் பிடிக்கும்னு சொல்லிட்டு இருக்க மாட்டாங்க, அனாதையாக இந்த வீட்டில் இருக்கேன்னு சொன்னதை கேட்கும் போது சப்புனு அடிக்கணும் போல கோவம் வருது எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கோவம் வரும். இதனால், வீட்டில் இருக்குற நாட்களில் ஜாலியாக இரு என்றார்.