Don't Miss!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இந்த வாரமும் டபுள் எவிக்ஷனா... வெளியேறுவதிலும் கடுமையாக போட்டி போடும் அந்த 3 பேர்
சென்னை : பிக்பாஸில் டிக்கெட் டு ஃபினாலேவை வெல்ல போவது யார் என்பதை கடந்து, இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதில் அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. இந்த வாரம் அதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.
Recommended Video
இந்த வாரம் போட்டியாளர்கள் இடையே நடந்த அடிதடி, மோதலுக்கு பிறகு யார் வெளியேறுவார்கள் என்பதை கணிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளதும் இதற்கு முக்கிய காரணம்.
கைதி 2 எப்போ... என்ன கதை...லீக்கான டைரக்டரின் மாஸ்டர் பிளான்
ஃபைனலுக்கு செல்லும் முதல் நபர்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. டிக்கெட் டு ஃபினாலேவை பெற சிபி, அமீர், சஞ்சீவ் ஆகியோர் போட்டி போடுகிறார்கள். இவர்களில் ஃபினாலே டிக்கெட்டை வெல்ல போவது யார் என்பது இன்று நடத்தப்படும் டாஸ்கின் முடிவில் தெரிந்து விடும். நேரடியாகவும் முதலாவதாகவும் இறுதிப் போட்டிக்கு செல்லப் போகும் அந்த நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
வெளியேற போவது யார்
அதே சமயம் இந்த வாரம் பிரியங்கா, தாமரை சண்டைக்கு பிறகு வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றதால் வருண் மற்றும் அக்ஷரா வெளியேற்றப்பட்டனர். அதிக போட்டியாளர்கள் இருப்பதால் டபுள் எவிக்ஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
டபுள் எவிக்ஷன் தானா
கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே இனி டபுள் எவிக்ஷன் தான் என சொல்லி விட்டார் கமலே. கடந்த வாரம் எவிக்ஷனை அறிவிப்பதற்கு முன், ஹின்ட் கொடுப்பதை போல் இரண்டு பேராக உட்கார வைத்து கேள்வி கேட்டார் கமல். அதே போல் இந்த வாரம் எவிக்ஷனுக்கு ஹின்ட் கொடுப்பதை போல் டாஸ்கில் இருந்து இரண்டு பேராக வெளியேற்றி வருகிறார் பிக்பாஸ்.
யாருக்கு அதிக ஓட்டு
இதனால் நிகழ்ச்சியின் 13 வது வாரத்திலும் டபுள் எவிக்ஷன் இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. டிசம்பர் 29 ம் தேதி நடத்தப்பட்ட Unofficial voting அடிப்படையில் வெளியேற்றுபவர்கள் பட்டியலில் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். அதிகமான ஓட்டுக்கள் பெற்று பிரியங்கா மற்றும் ராஜு முதல் இடத்தில் இருக்கிறார்களாம். ராஜு 23 சதவீதம் ஓட்டுக்களுடன் முதலிடத்திலும், 21 சதவீதம் ஓட்டுக்களுடன் பிரியங்கா இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளியேற்ற பட்டியலில் 3 பேர்
முதலில் குறைவான ஓட்டுக்களுடன் சிபி தான் கடைசி இடத்தில் உள்ளதால் கூறப்பட்டது. ஆனால் நேற்றைய ஆன்லைன் ஓட்டுப்பதிவு அடிப்படையில் நிரூப், தாமரை, சஞ்சீவ் ஆகியோர் தலா 7 சதவீதம் ஓட்டுக்களுடன் சமநிலையில் உள்ளனராம். இவர்களைத் தொடர்ந்து 8 சதவீதம் ஓட்டுக்களுடன் அமீர் உள்ளாராம். இந்த வார டாஸ்கில் இறுதி வரை ராஜுவுக்கு டஃப் கொடுத்து விளையாடியதால் பாவனிக்கு ஆதரவு பெறுகி உள்ளதாம். ஆனால் தாமரை, பிரியங்கா சண்டையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார டிஆர்பி கூடி உள்ளது. இதனால் தாமரை வெளியேற குறைவான வாய்ப்புக்களே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரே மேடையில் இரு அறிவிப்பு
இந்த வாரம் 3 பேர் ஒரே அளவில் ஓட்டுக்களை பெற்றுள்ளதால் எந்த இரண்டு பேர் வெளியேற போகிறார்கள் என கணிக்க முடியாமல் உள்ளது. தாமரை- நிரூப் அல்லது நிரூப் - சஞ்சீவ் அல்லது தாமரை - சஞ்சீவ் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெளியேற போகிறவர்கள், இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்ல போகிறவர் ஆகிய இரண்டையும் இந்த வாரம் கமல் சொல்ல உள்ளார்.