Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக்பாஸ் 5 தமிழ் கிராண்ட் ஃபினாலே... வெளியான லேட்டஸ்ட் அப்டேட்...குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் நிகழ்ச்சியாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசன்கள் முடிந்து தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
Recommended Video
18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் அமீர், நிரூப், பிரியங்கா, ராஜு, பாவனி ஆகிய ஐந்து பேர் இறுதிப் போடிக்கு சென்றுள்ளனர். சிபி, ரூ.12 லட்சத்துடன் வெளியேறி சென்றார். தற்போது நடைபெற்று வரும் ஃபினாலே வாரத்தில், வெளியேறி சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் புத்தாடை அணிந்து பொங்கல்...மொத்த போட்டியாளர்களும் மகிழ்ச்சி
ஃபினாலே நடக்குமா
106 நாட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் என்றைக்கு நடத்தப்படுகிறது என அறிவிக்கப்படாமல் இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் ஃபினாலே நடத்தப்படுமா, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் ஃபினாலே நடத்தப்படும் தேதி, நேரம் போன்றவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபினாலே எப்போது தெரியுமா
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே ஜனவரி 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு துவங்கி, நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக வழக்கம் போல் மாலை துவங்கி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, அப்படி நடத்தப்பட போவதில்லையாம்.
அட...இதெல்லாம் இருக்கா
முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனின் ஃபினாலே நேரடி ஒளிபரப்பாக இல்லாமல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாம். ஃபினாலே நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் இன்று காலை 9 மணிக்கு துவங்கி நடத்தப்பட உள்ளதாம். இதற்கு முன்பாகவே மற்ற பரிசு வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளதாம்.
சஸ்பென்ஸ் வைக்கிறாங்க
இந்த ஃபினாலே நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள், டைட்டில் வின்னர் யார், பிரியங்கா உடல்நிலை சரியில்லாததால் அவர் பங்கேற்பாரா என்பது போன்ற விஷயங்கள் உறுதியாகாமல் இருந்து வருகிறது.