Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முன்னாள் போட்டியாளர்கள்.. வெளியில் என்ன பேசிக்கிறாங்க நைசா கேட்ட அமீர் !
சென்னை : விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 இந்த வாரத்தோடு முடிவடைகிறது.
கடந்த சீசன்களைப்போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது.
இறுதிப்போட்டியாளர்களாக நிரூப், பாவனி, பிரியங்கா, அமீர் மற்றும் ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வெட்டிக்கதை
பிக் பாஸ் வீடு முழுக்க ஆட்களாக இருந்த வீட்டில் தற்போது வெறும் 5 பேர் மட்டுமே உள்ளதால் வீடே வெறிச்சோடி காணப்படுகிறது. டாஸ்க் எதுவும் இல்லாததால் போட்டியாளர்கள் வெட்டிக்கதைகளை பேசி வெட்டியாக பொழுதை கழித்து வருகின்றனர்.
ஸ்ருதி, நாடியா சாங்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் என்பதால் இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் விருந்தாளிகளாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி, பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று ஸ்ருதி, நாடியா சாங் உள்ளே வந்துள்ளனர்.
போட்டியாளர்களை வாழ்த்தினர்
வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள் டாப் போட்டியாளர்களாக வந்தவர்களுக்கு புதிய உடைகளை கொடுத்து மாலை அணிவித்து வாழ்த்தினர். அவர்களை சூழ்ந்து கொண்ட போட்டியாளர்கள் வெளியில் இந்த சீசனைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டனர். இந்த சீசன் 5 உண்மையில் நல்ல இருக்கு. அனைவரும் விரும்பி பார்ப்பதாக ஸ்ருதியும் , நாடியாவும் கூறினார்கள்.
மக்களுக்கு நம்பிக்கை இருக்கு
மேலும், ஸ்ருதியிடம் தனியாக பேசிய அமீர் மக்கள் என்னைப் பற்றி வெளியில் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டார். மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கு நீங்க ஸ்ட்ராங் போட்டியாளர் தான். அதுவும் இல்லாமல் இந்த சீசன் 5 நல்ல இருக்கு வெளியில் போனதிற்கு பிறகு அனைவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றார். அமீர் உண்மையில் வெற்றியை பற்றி கேட்டாரா இல்லை, காதல் விவகாரம் குறித்து கேட்டாரா என்பது தெரியவில்லை.
மீண்டும் பாவனியுடன்
வைல்டு கார்டு மூலம் அமீர் வந்தாலும் டாஸ்கில் அமீர் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், போட்டியில் கவனம் செலுத்துங்கள் என்று கமல் கூறிய அட்வைக்கு பிறகு பாவனியிடம் விலகி இருந்த அமீர் கடைசி வாரத்தில் அவருடன் இணைந்து மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறார். இதனால் அவருக்கு வாக்குகள் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் அமீர் தற்போது இல்லை.