Don't Miss!
- News எங்க ஏஜெண்டை துரத்திட்டு "கள்ள ஓட்டு" போட்டிருக்காங்க.. மறு வாக்குப்பதிவு தேவை: தமிழிசை பரபர புகார்!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பாப்பா போகாதே இரு… யாஷிகாவிடம் உருகிய நிரூப்.. கிண்டலடித்த ஹவுஸ்மெட்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டம் நெருங்கி கொண்டு வருகின்றது. கடந்த சீசன்களை விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இந்த முறை தெரிந்த முகத்தை விடை தெரியாத முகம் தான் அதிகம் இருக்கிறார்கள். மேலும், வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் சவால்கள், போட்டிகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.
நடிகர் வடிவேலுக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி !
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்க நெருங்க ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிக் பா1
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய தருணங்களில் ஒன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தருவது , குடும்பத்தினர் வருகை தரும்போது போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விடுவது, சென்டிமென்ட் மழை பொழிவது போன்ற காட்சிகளை கடந்த 4 நாட்களாக நாம் பார்த்து வருகிறோம்.
யாஷிகாவிடம் உருகிய நிரூப்
நேற்றைய எபிசோடில் ஹைலைட்டான விஷயமே யாஷிகா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததுதான். எதிர் வீட்டு ஹீரோயினி நீ என்ற பாடலுடன் வீட்டிற்குள் நுழைந்தார் யாஷிகா, அவரை பார்த்ததும் துள்ளி குதித்து ஓடி வந்த நிரூப்... . பாப்பா பாப்பா என்று உருகி உருகி பேசினார். பாப்பா எப்படி இருக்க, நிக்காத பாப்பா உக்காரு என கூறி கண் இமைக்காமல் யாஷிகாவையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
செம ரொமான்ஸ்
கண்ணாடி கூண்டுக்குள் இருந்த யாஷிகா கண்ணாடி மீது கை வைக்க, அதே இடத்தில் நிரூப் கை வைக்க ஒரே ரொமான்ஸ் தான் போங்க. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த போட்டியாளர்களும் டேய் நிரூப் என்னடா பண்ற என்று கேட்கும் அளவுக்கு இருந்தது இவர்களின் ரொமான்ஸ்.
கொஞ்ச நேரம் இரு பாப்பா
பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததே உன்னை பார்க்கத்தான்டா, நான் நல்லா தான் இருக்கேன், நீ நல்லா கேம் விளையாடு, நான் போறேன் என்று கூறியதும். பாப்பா போகாதே இரு...கொஞ்ச நேரம் இரு... ஐ லவ் யூ என்று பேசியது எல்லாம் அல்டிமேட். அன்னியன் மாதிரி இருந்த நிரூப் ரெமோ மாதிரி பேசியது ஹவுஸ் மெட்டுகளை மட்டுமல்ல நம்மையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Recommended Video
கட்டிபிடிக்க முடியலையே
இதைப்பார்த்த போட்டியாளர்கள் டேய் நிரூப் நீயாடா இது எங்களால நம்பவே முடியால என கிண்டலடிக்க வெட்கப்பட்டுக்கொண்டே, கண்ணாடி கூண்டு போட்டு அவள கட்டிப்பிடிக்க முடியாம பண்ணிட்டாங்க என்று ஏக்க பெருமூச்சு விட்டார். நல்லவேலை கண்ணாடி கூண்டு போட்டாங்க இல்லனா என்ன ஆகி இருக்குமோ.