Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சாரி டா … கட்டிப்பிடித்து ராஜுவை சமாதானம் செய்த பாவ்னி… நெகிழ்ந்த ஹவுஸ்மெட்ஸ் !
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவ்னி அபிநய் விவகாரத்தில், வீடே சண்டையால் அலறிய நிலையில், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்டில் என்று சொல்ல வைத்தாலும், அவ்வப்போது நடக்கும் சண்டையை மறந்துவிட்டு பேசுவதும்... தவறுக்கு மன்னிப்பு கேட்பதும் நல்ல பண்பாக பார்க்கப்படுகிறது.
இந்த செயலை பிக் பாஸ் ரசிகர்கள் உண்மையில் நெகிழ்ந்து ரசித்து இருப்பார்கள்.
ஏன் போய் போய் கேட்குறீங்க? தப்புதானே.. பிரியங்காவை வாய் அடைக்க வைத்த ராஜு!
பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் வீட்டில் ஹாட் டாப்பிங்காக இருப்பது பாவ்னி அபிநய் கிசுகிசு விவகாரம் தான். எப்போது எல்லாம் பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைகிறதோ, அப்போது எல்லாம் பாவ்னி அபிநய் விவகாரம் ஊறுகாய் போல எடுத்துக்கொள்ளப்படும்.
பாவ்னி அபிநய் விவகாரம்
அரசியல் கட்சி டாஸ்கில் தலைவரை கேள்வி கேட்கும் விவாதத்தில் பாவ்னி அபிநய் விவகாரத்தை முன்வைத்து பேசினார் ராஜூ. வீட்டில் என் கண் முன் நடக்கும் விஷயத்தை நான் கேட்கக்கூடாதா என்று அடுக்கடுக்கான கேள்விகனை உரக்கச் சொல் கட்சியின் தலைவரான பிரியங்கா முன் வைத்தார் ராஜூ. இதை கேட்டு கடுப்பான பாவ்னி பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லையா என கலங்கினார்.
உனக்கு உரிமை இல்லை
இதையடுத்து, இந்த பிரச்சினை குறித்து இன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்தது. அப்போது பாவ்னி, நான் அபினய் கூட தனியாக உட்கார்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசுவேன், அது எங்களது விருப்பம் உனக்கு இதை பற்றி பேச உரிமை இல்லை... நீ என் அண்ணனா, நீ என் தம்பியா... நீ ஏன் பேசுகிறாய் நீ யார்? என ராஜூவை பார்த்து கேட்டார். பாவ்னியின் கேள்வியால் ராஜூ நிலை குலைந்து போனார்.
சாரிடா ராஜூ.
இதையடுத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர் அப்போது, பாவ்னி மிகவும் மனக்கவலையில் இருக்க, அவரை அமீர் சமாதானப் படுத்தினார். மேலும், ராஜூவும் கவலையா இருக்காரு போ அவரிடம் பேசு என்றார் அமீர். இதையடுத்து பாவ்னி ராஜூவிடம் சென்று கட்டிப்பிடித்து தேம்பி அழுது சாரி டா ராஜூ என்கிறார். அண்ணாச்சி,சிபி, அக்ஷரா, நிரூப் என ஒவ்வொருவரிடமும் என்று மன்னிப்பு கேட்டார் பாவ்னி. எத்தனை சண்டைகள் இருந்தாலும் அதை மறந்து பாவ்னி மன்னிப்பு கேட்டாது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.