Don't Miss!
- News சிலிர்த்த வன்னியர்! விசிக திருமா எம்பியாவது ஏன் முக்கியம்? அடித்து பேசிய சிவசங்கர்! இதான் தமிழ்நாடு
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தொடர்ந்து 16 மணி நேரம்.. கயிறை விடாமல் பிடித்திருத்த தாமரை… கேப்டன் பதவிக்காக எடுத்த ரிஸ்க் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரத் தலைவராக தாமரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் உட்ராதீங்க எப்போவ் டாஸ்க் என்ற பெயரில் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
கொடுக்கப்பட்ட கயிறை கடைசி வரை விடாமல் பிடித்திருப்பவரே இந்த வார தலைவராக தகுதி ஆனவர் என அறிவித்திருந்தார் பிக் பாஸ்.
விடிய விடிய தூங்காமல்
இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் கயிற்றை விடாமல் பிடித்துக் கொண்டே இருந்தனர். அப்போது, பிரியங்காவுக்கும் நிரூப்பிற்கும் சண்டை ஏற்பட்டதால், கோவத்தில் கயிற்றை விட்டு விட்டு போட்டியிலிருந்த வெளியேறினார். ஒரு கட்டத்தில் சஞ்சீவ், வருண், அக்ஷரா ,பவானி கயிறை விட்டு தூங்க சென்றுவிட்டனர். சிபி, ராஜூ, தாமரை, நிரூப், அமீர் ஆகியோர் விடிய விடிய தூங்காமல் கயிற்றை கையில் வைத்துக்கொண்டே விழித்து இருந்தனர்.
இறுதிவரை தாமரை
பெண்கள் அனைவரும் போட்டியிலிருந்து விலகிய நிலையில் தாமரை மட்டும் இறுதிவரை போட்டியிலிருந்து விலகாமல் ஒரு உறுதியான பெண்ணாகவே இருந்தார். நேரம் சென்று கொண்டே இருந்தது. இறுதியாக போட்டியில் அமீர் மற்றும் தாமரை என இருவர் மட்டுமே இருந்தனர்.
தாமரை தலைவர்
இருவரில் யார் தலைவர் என்பதை முடிவு செய்து அறிவிக்குமாறு பிக் பாஸ் கூறியதை அடுத்து, தாமரைக்காக அமீர் விட்டு கொடுத்தார். இதனால் பிக் பாஸ் வீட்டின் இந்தவாரத் தலைவராக தாமரை தேர்ந்தெடுக்கப்பட்டார். தாமரை தலைவராக இருப்பது இது இரண்டாவது முறையாக. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதன் முதலில் தலைவராக இருந்தது தாமரைத்தான்.
Recommended Video
மனஉறுதியுடன் 16 மணி நேரம்
தொடர்ந்து 16 மணி நேரம் உணவிற்கு கயிற்றை விடாமல் மன உறுதியுடன் இருந்த தாமரையை பிக் பாஸ் பாராட்டினார். ஆண்களே முடியாது என்று கைவிட்ட போதும் தாமரை மனம் தளராது இந்த டாஸ்கில் வெற்றி பெற்றுள்ளார். இதனை இணையவாசிகள் பாராட்டி வருகிற்னர்.ஹ