பாத்திரம் கழுவினால் ஜெயிக்க முடியாது.. எதுக்கு இங்க வந்த.. தாமரைக்கு வக்காலத்து வாங்கும் பிரியங்கா!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் என்னதா நடக்குதுனு கேட்கும் அளவுக்கு நாளுக்கு நாள் சண்டையும் சச்சரவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
குறிப்பாக பிரியங்காவை பற்றி பரிந்து கொள்ளவே முடியால திடீரென ஆத்திரத்தில் மிகவும் மோசமாக சண்டை போடுகிறார் . அடுத்த நொடியே கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.
இதனால், போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல் நம்மையும் முகம் சுளிக்க வைக்கிறது.

பிக் பாஸ் டாஸ்க்
நேற்றைய பிரேக்கிங் யூஸ் டாஸ்கில், தாமரையை சீண்டி வம்பு இழுத்து , அவரை ஆத்திரத்தில் கத்தவிட்டனர். இதனால் வீடிடே இரண்டானது. பின்னர், இது எல்லாமே ஒரு பிராங்க், ரெட் டிவியின் டிஆர்பிக்காக செய்தது என்று ஒரே போடு போட்டனர். இதனால் , தாமரை மிகவும் ஆத்திரம் அடைந்தார். நான் பேசுவதை ஏன் டாஸ்கில் பேசி கிண்டல் செய்வதாக என்று கேட்டு கோபத்தில் பிரியங்காவிடம் கத்தினார்.

கதறி அழுத தாமரை
ஒரு கட்டத்தில் எதுக்கும் கலங்காத தாமரையே பிரியங்காவின் பேச்சால் வருணிடம் மனம் விட்டு கதறி அழுதார். இதையடுத்து பிரியங்கா ஒன்னுமே நடக்காதது போல தாமரையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சாப்பாடு சூப்பர் என்றார்.

உன்வேலையை மட்டும் பார்
இதையடுத்து, இன்றையய எபிசோடில் தாமரை பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த பிரியங்கா , தாமரை உனக்கு சமைப்பது மட்டும் தான் வேலை நீ ஏன் பாத்திரம் கழுவுற என்று கேட்டார். இதற்கு தாமரை தூக்கம் வரவில்லை அதான் நான் பாத்திரம் கழுவுகிறேன் என்றார்.

மக்கள் ஜெயிக்க வைக்க மாட்டாங்க
இதற்கு, பிரியங்கா, நீ பாத்திரம் கழுவதான் இங்கே வந்தியா..? நீ பாத்திரம் கழுவினால் மக்கள் உனக்கு வோட் போட்டு ஜெயிக்க வைக்க மாட்டாங்க . இந்த வேலையை பாத்திரம் கழுவும் டீம் செய்ய வேண்டிய வேலை அவங்களை செய்ய சொல் என்று கத்துகிறார். மேலும் , தாமரை வேலை செய்துக்கிட்டே இருக்கானு கூறுகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ், ஆடு நனைகிறதேனு ஓநாய் கவலைப்பட்டதாம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











