காதலை மறக்காத யாஷிகா… பிக் பாஸ் வீட்டிற்கு திடீர் விசிட்... துள்ளிகுதித்து ஓடி வந்த நிரூப் !
சென்னை : 100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 80வது நாளை எட்டி உள்ளது.
Recommended Video
பல சண்டைகள், கருத்துவேறுபாடுகள் என பல வந்தாலும் இறுதியில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து. தனித்தனியாக திறமையாக விளையாடி வருகின்றனர்.
இன்றைய நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் வீட்டிற்குள் திடீர் விசிட்டடித்துள்ளார்.

Freeze டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த டாஸ்க்கான Freeze டாஸ்க் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் குடும்பம் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் அக்ஷராவின் அண்ணன் மற்றும் அம்மா வந்திருந்தனர்.

அழகான தருணம்
அதேபோல, சிபியின் மனைவி மற்றும் தந்தையும் வந்திருந்தனர். அவர்களை மற்ற போட்டியாளர்கள் வரவேற்றனர். அவர்களுடன் அமர்ந்து பல சவாரசியமான விஷயங்கள் குறித்தும் பேசி மகிழ்ந்தனர். மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வரும் நாட்களில் ஒருவர் பின் ஒருவராக வர உள்ளனர்.

யாஷிகா ஆனந்த்
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்த் திடீரென விசிட்அடித்துள்ளார். அதில் அவர், நிரூப் நன்றாக விளையாடுவதாகவும் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் ராஜூ உள்பட அனைவருக்கும் வாழ்த்து கூறிய அவர் நீங்கள் அனைவரும் வெளியே வந்தவுடன் மிகச் சிறந்த அளவில் வளர்ச்சி அடைவீர்கள் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

காதலை மறக்காத யாஷிகா
நடிகை யாஷிகா மற்றும் நிரூப் முன்னாள் காதலர் ஆவார். இவர்கள் இருவரும் தங்கள் காதலை முறித்துக் கொண்டாலும் யாஷிகா தன் முன்னாள் காதலருக்காக இந்த பிக்பாஸ் வாய்ப்பை வாங்கிக் கொடுத்துள்ளார். இதை நிரூப் கடந்து வந்த பாதையில் கூட யாஷிகாவால்தான் நான் இங்கே வந்தேன் என்று பெருமையாக கூறினார். அதேபோல நிரூப்பின் காதலை மறக்காமல் யாஷிகாவும் சிறப்பு விருந்தினராக வந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











