Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாவம் பச்சப்புள்ள ருத்ரா.. கடைசி ஆசை கூட நிறைவேறாம செத்துப் போச்சு.. கண்ணீர் கடலில் பிக் பாஸ் ஆரி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் தீவிர ரசிகையான குழந்தை ருத்ரா பரிதாபமாக உயிரிழந்தது நடிகர் ஆரியை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.
நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆரி.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.
ப்பா.. அப்படியே ஜோக்கராவே மாறிட்டாரே.. பிக் பாஸ் பிரபலத்தின் திடீர் கெட்டப் சேஞ்ச்.. ஏன் இப்படி?
குழந்தை ருத்ரா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஆரிக்கு வாரம் ஆனால் 50 ஓட்டுக்களையும் போட்டு வந்த குழந்தை ருத்ரா உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மரணம் ரசிகர்களை மட்டுமின்றி நடிகர் ஆரியையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.
தண்டு வட பிரச்சனை
குழந்தை ருத்ராவுக்கு முதுகு தண்டுவடத்தில் அரிய வகை பாதிப்பு தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மொபைல் போனில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது மட்டுமின்றி நடிகர் ஆரிக்கு ஓட்டுக்களையும் அவர் செலுத்தி உள்ளார்.
அந்த வீடியோ
பரிதாபமாக உயிரிழந்த குழந்தை ருத்ரா பிக் பாஸ் சமயத்தில் நடிகர் ஆரிக்கு ஓட்டுப் போடும் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி குழந்தை ருத்ராவின் மறைவால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
என் சுவாசம் உள்ளவரை
"குழந்தை ருத்ராவின் அன்பு எனக்கு கிடைத்த வரம். குழந்தையின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன் சுவாசம் நின்று விட்டாலும், என் சுவாசம் உள்ளவரை நினைவில் கொள்வேன்" என நடிகர் ஆரி உருக்கமாக பதிவிட்டு இருப்பது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடைசி ஆசை
ஆரியின் அந்த ட்வீட்டுக்கு கீழே ருத்ராவின் அம்மா சந்தியா போட்டுள்ள ட்வீட் மேலும் ரசிகர்களை உருக்கி வருகிறது. அவ உங்களோட தீவிர ரசிகை. உங்களை நேரா பார்த்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பா.. இப்ப சொர்க்கத்துல ஹேப்பியா இருப்பா என ருத்ராவின் அம்மா போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழ் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.