Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிக் பாஸ் அபிநய் மனைவியை பிரிந்து விட்டாரா? ... அவரே சொன்ன தகவல் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிநய் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக பரவி வரும் தகவலுக்கு அவரே பதிலளித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்தவர் அபிநய் வட்டி.
இவர்கள் ராமானுஜம், சென்னை 6000028 பார்ட் 2 போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
டாப் நடிகருக்கு அந்த கால் அழகியை ஜோடியாக்க எடுத்த முயற்சி வீணாப்போச்சாம்.. என்ன சொன்னாரு தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்ததும் மந்தமாக விளையாடிய அபிநய் நாட்கள் செல்ல செல்ல விளையாட்டில் தீவிரம்காட்டினார். ட்ரூத் ஆர் டேர் கேமில் ராஜூ, பாவனியை லவ் பண்றியா என ஒரு கேள்வியை கேட்டு பிரச்சினையை தொடங்கினார். இதனால், அபிநய்-பாவனி விவகாரம் வீட்டில் பூதாகரமாக வெடித்தது. இறுதியில், கமல் குறும்படம் போட்டு பிரச்சினை தீர்த்துவைத்தார்.
சோசியல் மீடியாவில் சர்ச்சை
அபிநய், பாவனி விவகாரம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்த அபிநய் பின்னர் வெளியேறினார். அபிநய் வெளியேறியதும், அவரின் மனைவி அபர்ணா, தன்னுடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென மாற்றினார். அபர்ணா அபிநய் என்று பெயர் வைத்திருந்த பெயரில் அபிநய் நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என்று மாற்றியதால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.
வெளியேறினார்
ஆனால், அபிநய் நாங்கள் பிரியவில்லை ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும், இவர்கள்வி பிரிந்து விட்டதாகன இணையத்தில் அவ்வப்போது வதந்தி பரவிவந்தன. இதையடுத்து மீண்டும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்த அபிநய் கடந்த வாரம் திடீரென வெளியேறினார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
அபிநய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில், ஒரு ரசிகர், உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அபிநய், இந்த செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இது தவறான நபர்களால் பரப்பப்படும் வதந்தி, இது உண்மை இல்லை, நானும் எனது மனைவி அபர்ணாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். அவர்கள் குறித்து தொடர்ந்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.