சீரியலில் களமிறங்கும் பிக் பாஸ் அனிதா சம்பத்… வெளியான பரபரப்புத் தகவல் !
சென்னை : அனிதா சம்பத் தொலைக்காட்சித் தொடரில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

பிரபலமானார்
பிக் பாஸ் இல்லத்தில் 84 நாட்கள் வரை இருந்த அனிதா பின்னர் எவிக்ஷன் செய்யப்பட்டு வெளியேறினார். பிக் பாஸ் சீசன் 4ல் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர்.

சொந்த யூடியூப் சேனல்
பிக் பாஸுக்கு பின் பேட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அனிதா, தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும், அனிதா சொந்தமாக ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

முற்றுப்புள்ளி
சமீபத்தில் அனிதா தனது கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் இணையத்தில் வேகமாக பரவின. இதனால் கடுப்பான அனிதா, கண்டண்ட் இல்லை என என்ன வேணும்னாலும் சொல்வீங்களே என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Recommended Video

சீரியலில்
இந்நிலையில், அனிதா சம்பத் சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் என்ற தொலைக்காட்சித் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியிலும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

வரலட்சுமியின் தங்கையாக
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான டேனியில் வரலட்சுமியின் தங்கையாக நடித்திருந்தார் அனிதா சம்பத். இத்திரைப்படம் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











