தழுதழுத்த குரலில்… இது என் மறுஜென்மம் என்ற அர்ச்சனா… கலங்கிய ரசிகர்கள் !
சென்னை : அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள அர்ச்சனா, தழுதழுத்த குரலில் உணர்ச்சியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
அதில் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, இது என் மறு ஜென்மம் என்றார்.
வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும்னு தெரியாது, அதனால் அனைவரும் அன்பாக இருங்கள் என உணர்ச்சியுடன் பேசினார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

தொகுப்பாளினி
தமிழில் முன்னணித் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் கலந்து கொண்டார்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனாலேயே இவர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்கவில்லை. தனது யூடியூப் சேனலில் மட்டும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

நலமாக உள்ளார்
மூளையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திடீரென அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார். இதையடுத்து கடந்த வாரம் அவருக்கு செரிப்ரோஸ்பைனஸ் திரவக் கசிவுக்கான அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் வீடு திரும்பி உள்ளார்.

இது என் மறு ஜென்மம்
அர்ச்சனா தனது யூடியூப் சேனலில், தழுதழுத்த குரலில் நான் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி இது என் மறு ஜென்மம் என்றார். வாழ்க்கையில அடுத்து என்ன நடக்கும்னு தெரியாது, அதனால் அனைவரும் அன்பாக இருங்கள் என்ற உணர்ச்சியுடன் பேசினார். மேலும் அந்த வீடியோவில் அவர் வீடு திரும்பும் போது வீல் சேரில் வந்த காட்சியையும் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா எல்லாம் சரி ஆகிவிடும் என்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











