Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அந்த விவகாரம்.. பிக் பாஸ் பிரபலம் அதிரடி கைது.. விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்று விசாரணை
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் அஜாஸ் கானை மும்பை போலீசார் கைது செய்துள்ளது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் அதிகளவில் உள்ளது தொடர்பாக தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரிஷ்யம்2 3 மாஸ்டர் பீஸ்.. ஜீத்து ஜோசப்பை பாராட்டிய பிரபல இயக்குனர்!
சமீபத்தில் அஜாஸ் கானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையின் போது போதைப் பொருள்கள் சிக்கிய விவகாரம் தொடர்பாக நேற்று விமான நிலையத்தில் இருந்து போலீசார் விசாரணைக்காக அவரை அழைத்துச் சென்றனர்.
பிக் பாஸ் பிரபலம்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அஜாஸ் கான். மேலும், ஏகப்பட்ட பாலிவுட் படங்களிலும் சில டோலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். போதைப் பொருள் டீலர்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்த போலீசார் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
விமான நிலையத்தில் இருந்து
ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு வந்த அஜாஸ் கானை விசாரணைக்காக போலீசார் நேற்று (செவ்வாய் கிழமை) அழைத்து சென்றனர். கடந்த வாரம் போதைப் பொருள் டீலர் ஷதாப் படாடா என்பவரை கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த விசாரணையில் அஜாஸ் கான் பெயர் அடிபடுவே அவரை விசாரணை செய்தனர்.
அஜாஸ் கான் கைது
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் அஜாஸ் கானிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் மீது குற்றம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் இன்று அவரை கைது செய்து வழக்கும் பதிவு செய்துள்ளனர். பிரபல நடிகரும் பிக் பாஸ் பிரபலமும் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
2 கிலோ போதைப் பொருள்
கடந்த வியாழனன்று போதைப் பொருள் டீலர் ஷதாப் படாடா வீட்டில் சோதனை போட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 2 கிலோ மெபிட்ரோன் எனும் போதைப் பொருள் சிக்கியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஏகப்பட்ட வெளிநாட்டினரையும் இந்த விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னணி நடிகைகள்
முன்னதாக பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் இருப்பது தொடர்பாக முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்ட நடிகைகளிடமும் நார்காடிக்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.