Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பட வாய்ப்புக்காக.. அந்த மோசமான அனுபவத்தை நானும் எதிர்கொண்டேன்.. பிரபல பிக்பாஸ் நடிகை பகீர் தகவல்!
மும்பை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்தை தானும் எதிர்கொண்டேன் என்று பிரபல பிக்பாஸ் நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று காலங்காலமாகப் பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கடந்த சில வருடங்களுக்கு முன் மீ டு புகார் எழுந்தது. ஹாலிவுட்டில் இருந்து தொடங்கிய இந்த புகார், இந்தியாவிலும் தொடர்ந்தது.
என்னம்மா கோலம் இது.. வெறும் டிஷர்ட்டுடன் போஸ் கொடுத்த நடிகை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
லாக்டவுன் நேரத்திலும்
நடிகை தனுஸ்ரீ தத்தா உட்பட பல நடிகைகள் துணிந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் புகார்களை கூறினர். இதனால் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது வரை பல்வேறு நடிகைகள் இந்த பிரச்னையை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த லாக்டவுன் நேரத்திலும் சில நடிகைகள் தங்கள் அனுபவத்தை கூறி வருகின்றனர்.
அகம்புறம்
இந்நிலையில், பிக்பாஸ் நடிகை காஷ்மிரா ஷா, தானும் இந்த அனுபவத்தை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இவர், தமிழில், திருமலை இயக்கத்தில் ஷாம் நடித்த அகம்புறம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். இந்தியில், எஸ் பாஸ், பியார் து ஹோனா ஹி தா, சாஸிஸ், ஜங்கிள், சிட்டி ஆஃப் கோல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கிளாமர் காட்சி
சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வரும் இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமானார். ஹாட் புகைப்படங்களாலும் கிளாமர் காட்சிகளாலும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் இவர். இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டாலும் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
அங்கமாகவே இருக்கிறது
பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் சம்பவத்தை தானும் எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ள இவர் மேலும் கூறியதாவது: ஒவ்வொரு சினிமா துறையிலும் இது ஓர் அங்கமாகவே இருக்கிறது. நானும் கூட அப்படி ஓர் அனுபவத்தை எதிர்கொண்டேன். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என் திறமையை நம்பினார்கள்.
புகழ்பெற்ற இயக்குனர்
அதற்காக அவர்களுக்கு நன்றி. நான் ராம் கோபால் வர்மா, ஆசிஸ் மிர்சா, மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற முக்கியமான, புகழ்பெற்ற இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதனால் என் சினிமா வாழ்க்கை குறித்து எனக்கு பெருமைதான். என் குழந்தைகள் வளர்ந்து, என் அம்மா சிறந்தவள் என்பதை அறிந்துகொள்ளும்போது நான் பெருமை படுவேன் என்று தெரிவித்துள்ளார்.