Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சார்… ஆப்பிள் சார்… கமலின் முன் அசடு வழிய நின்ற பிரியங்கா !
சென்னை : பிக் பாஸ் வீட்டிள்குள் சத்தமில்லாமல் கமல் வந்த போது ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டு அசடு வழிய சிரித்தார் பிரியங்கா.
Recommended Video
அஜித்தோட பெரிய ரசிகன் நான்... மாரி 3 பத்தி யோசிக்கல... இயக்குநர் பாலாஜி வெளிப்படை
வாய் முழுவதும் ஆப்பிளை வைத்துக்கொண்டு நின்ற பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
சாப்பிடுற நேரமா இது
பிக் பாஸ் வீட்டிலிருந்து நிரூப், அமீர் மற்றும் பாவனி மூவரும் வெளியேறியதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் ராஜூ மற்றும் பிரியங்கா மட்டுமே இருந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல சத்தமே இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் கமல்ஹாசன், அந்த நேரத்திலும் வயிறுதான் முக்கியம் குமாரு என்பது போல ஆப்பிளை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் பிரியங்கா.
சார்… ஆப்பிள் சார்
வீட்டிற்குள் வந்த கமல், வாயெல்லாம் சிரிப்பாக பார்த்திருக்கேன்... என்று பிரியங்காவை கலாய்த்தார். சார்... ஆப்பிள் சார் என்று அசடு வழித்த படி கூறினார்., இதைப்பார்த்த பல நெட்டிசன்ஸ் சரியான சாப்பாட்டு பைத்தியம், பிரியங்காவுக்கு சாப்பாடுதான் உலகம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.
சோறுதான் முக்கியம்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் பிரியங்காக சாப்பாட்டுக்காகத்தான் முதலில் அழுதார். பீசா, கேக் என எது வந்தாலும் கொஞ்சம் கூட கூச்சமே படாமல் சாப்பிட்டு விடுவார். பேருந்து டாஸ்கின் போது கூட, பீசாவை பார்த்ததும் டாஸ்க்கை பாதியிலேயே விட்டு வந்துவிட்டார் பிரியங்கா. எது எப்படி இருந்தாலும் நமக்கு சோறுதான் முக்கியம் பங்கு என்ற கொள்ளையை வைத்து இருக்கிறார் பிரியங்கா.
லைட்ஸ் ஆஃப்
ஒருவழியாக கமலின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி அப்படியே ஆப்பிளை சாப்பிட்டுவிட்டார் பிரியங்கா. . இதையடுத்து, கமலுடன் பிரியங்கா, ராஜூ தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிக் பாஸ் வீட்டிலிருந்து இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டு லைட்ஸ் ஆப் என கூறிவிட்டு மூவரும் வெளியேறினார்கள். இதையடுத்து, பிக் பாஸ் பாஸ் வீட்டின் லைட் அணைக்கப்பட்டன.
ராஜூ வெற்றியாளர்
ராஜூ பாய் என மக்களின் மனம் கவர்ந்த ராஜூ இந்த சீசனின் வெற்றியாளராகி 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை தட்டிச்சென்றார்., பிரியங்காவுக்கு இரண்டாம் இடத்தையும், பாவனி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.