Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
உங்கள் முடிவுகள் அறிவிக்கப்படப் போகும் நாள்.. 6 மணி நேர பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே.. அட்டகாச புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தொடர்ந்து 6 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது என கமல்ஹாசன் கூறும் அட்டகாசமான புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அந்த தருணம் நெருங்கி விட்டது.
டைட்டில் வின்னர் யார்? கிராண்ட் ஃபினாலேவில் என்ன என்ன சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்பதை பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங்.
சூப்பர் ஹீரோ ஆரி.. மின்னல் வேகத்துல போறாரே.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் பாடல் ரிலீஸ்!
ஷூட்டிங் நாளைக்குத்தான்
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் வெள்ளியன்றும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் சனியன்றும் நடத்தப்படும். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த வாரம் யார் எவிக்ட் ஆனார்கள் என்பது ஒரு நாள் முன்பே லீக் ஆகி விடும். இந்நிலையில், கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் நாளை காலை 8 மணிக்குத் தான் தொடங்க உள்ளதாம்.
மயான அமைதி
கிராண்ட் ஃபினாலே நெருங்கி விட்டது. ஆனால், பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பதற்கு பதிலாக சங்கடத்தில் உள்ளனர். குறிப்பாக ரியோ, பாலா மற்றும் ரம்யாவின் நிலைமை தான் ரொம்பவே கவலைக்கிடமாக உள்ளது. பிக் பாஸ் வீட்டில் ஒரு மயான அமைதி நிலவி வருகிறது.
கமல் கரெட்க்ட் பண்ணுவார்
சனிக்கிழமை நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் கவலைகளை எல்லாம் கமல் கரெக்ட் பண்ணி கிராண்ட் ஃபினாலேவுக்கு போட்டியாளர்களை தயார் செய்வார் என்பது இரண்டாவது புரமோவை பார்க்கும் போதே தெரிகிறது. வெற்றியோ? தோல்வியோ? 5 பேருக்கும் விடுதலை கிடைக்கப் போவதை எண்ணி ஹேப்பியா இருக்கலாமே!
6 மணி நேரம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவில் பேசிய கமல்ஹாசன், நாளைய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து 6 மணி நேர நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது என அறிவித்துள்ளார். இரவு 12 மணிக்குத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிறைவடையுமாம்.
உங்கள் முடிவு
மேலும், இந்த மூன்றாவது புரமோவில் பேசிய கமல், இந்த 5 பேரில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார் என்றும், உங்கள் முடிவுகள் அறிவிக்கப்படப் போகும் நாள் நாளை என்றும் கூறியுள்ளார். பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் மக்கள் வாக்குகள் அதிகம் பெற்ற ஆரி தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்த்து வருகின்றனர்.
அதிக வாக்குகள்
பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் டைட்டில் வின்னர் ஆரி தான் என்றூம், அதிக வாக்குகளை வழக்கம் போல இந்த வாரமும் அவர் தான் பெற்றுள்ளார் எனக் கூறி வருகின்றனர். ரன்னர் அப் ரியோ ராஜ் என்றும் கூறி வருகின்றனர். கடந்த வாரம் பாலாஜி முருகதாஸ் அதிக வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை உண்மையான ரிசல்ட் தெரிந்து விடும்.
என்ன இருக்கும்
நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி 6 மணி நேரம் என கமல் கூறியுள்ள நிலையில், ஆரிக்கு டைட்டில் கொடுக்க எதுக்கு 6 மணி நேரம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஸ்பெஷல் கெஸ்ட் யார் வரப்போறாங்க, என்னவெல்லாம் ஸ்பெஷல் இருக்கப் போகிறது என்பதையும் யோசித்து வருகின்றனர்.