Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
“வாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாந்தேன், எல்லாம் குடும்பத்துக்காக தான்”: மனம் திறந்த பிக்பாஸ் ஜூலி
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவை மூலம் மக்களிடம் பிரபலமான ஜூலி, இப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி, வாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
பீச்சுக்கு போன பிக் பாஸ்.. முதல் சீசனில் இருந்த மாதிரி ஸ்ட்ரிக்டா இருங்க என ரசிகர்கள் உத்தரவு!
ஜல்லிக்கட்டு முதல் பிக்பாஸ் வரை
2017ல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை உலகமே திரும்பிப் பார்த்தது. அந்த போராட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஜூலியை, இப்போது தமிழ்நாடே கொண்டாடி வருகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஜூலி விட்ட சவுண்டில் ஆடிப் போன விஜய் டிவி, அவரை அலேக்காக தூக்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து பாயாசம் ஊற்றியது. அங்கேயும் ஜூலி ஆடிய ருத்ரதாண்டவத்தில், விஜய் டிவியின் டிஆர்பி ஏகத்துக்கும் எகிறி அடித்தது.
ரியாலிட்டி ஷோ முதல் சினிமா வரை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் ஜூலியின் மார்க்கெட் வேற லெவலில் ஏறியது. விஜய் டிவியிலேயே நிரந்தரமாக தங்கிவிட நினைத்த ஜூலி, அடிக்கடி ரியாலிட்டி ஷோக்கள், டான்ஸ் நிகழ்ச்சிகளில் களமிறங்கினார். அப்படியே அங்கிருந்து மாடலிங் சென்ற ஜூலி, தற்போது சில படங்களிலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது ஃப்ளாஷ் பேக் கதை ஒன்றை கூறியுள்ளார் ஜூலி.
வாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாந்தேன்
ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ், மாடலிங், சினிமா என கலக்கி வரும் ஜூலி, ரியலாகவே நர்ஸ் என்பது பலருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில், அவர் லண்டனில் வேலைக்கு செல்ல வேண்டும் என 3 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டதாகக் கூறியுள்ளார். லண்டனில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு நர்ஸ் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக விளம்பரம் பார்த்து, மும்பையைச் சேர்ந்த ஏஜென்ஸியிடம் பணம் கொடுத்தேன் எனக் கூறியுள்ளார்.
குடும்பத்தினர் தான் ஆறுதலாக இருந்தனர்
அப்போது "ஒருநாள் பணம் கட்டிய மும்பை ஏஜென்சி என்னை ஏமாற்றிவிட்டதாக தெரியவந்தது. ரொம்ப அதிர்ச்சியாக இருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நடுரோட்டில் நின்றபடி என்னுடைய அப்பாவுக்கு ஃபோன் செய்து ஏமாந்துட்டோன் என்று சொன்னேன். அதற்கு அவர் காசு, பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம்.. நீ வீட்டுக்கு வந்துவிடுமா என்று சொன்னார். அப்பா அப்படி சொன்னதுமே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. நான் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு அப்பா தான் கரணம்" எனக் கூறியுள்ளார்.