Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“வாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாந்தேன், எல்லாம் குடும்பத்துக்காக தான்”: மனம் திறந்த பிக்பாஸ் ஜூலி
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவை மூலம் மக்களிடம் பிரபலமான ஜூலி, இப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி, வாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
பீச்சுக்கு போன பிக் பாஸ்.. முதல் சீசனில் இருந்த மாதிரி ஸ்ட்ரிக்டா இருங்க என ரசிகர்கள் உத்தரவு!
ஜல்லிக்கட்டு முதல் பிக்பாஸ் வரை
2017ல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை உலகமே திரும்பிப் பார்த்தது. அந்த போராட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஜூலியை, இப்போது தமிழ்நாடே கொண்டாடி வருகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஜூலி விட்ட சவுண்டில் ஆடிப் போன விஜய் டிவி, அவரை அலேக்காக தூக்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து பாயாசம் ஊற்றியது. அங்கேயும் ஜூலி ஆடிய ருத்ரதாண்டவத்தில், விஜய் டிவியின் டிஆர்பி ஏகத்துக்கும் எகிறி அடித்தது.
ரியாலிட்டி ஷோ முதல் சினிமா வரை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் ஜூலியின் மார்க்கெட் வேற லெவலில் ஏறியது. விஜய் டிவியிலேயே நிரந்தரமாக தங்கிவிட நினைத்த ஜூலி, அடிக்கடி ரியாலிட்டி ஷோக்கள், டான்ஸ் நிகழ்ச்சிகளில் களமிறங்கினார். அப்படியே அங்கிருந்து மாடலிங் சென்ற ஜூலி, தற்போது சில படங்களிலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனது ஃப்ளாஷ் பேக் கதை ஒன்றை கூறியுள்ளார் ஜூலி.
வாய்ப்புக்காக பணம் கொடுத்து ஏமாந்தேன்
ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ், மாடலிங், சினிமா என கலக்கி வரும் ஜூலி, ரியலாகவே நர்ஸ் என்பது பலருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில், அவர் லண்டனில் வேலைக்கு செல்ல வேண்டும் என 3 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டதாகக் கூறியுள்ளார். லண்டனில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு நர்ஸ் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக விளம்பரம் பார்த்து, மும்பையைச் சேர்ந்த ஏஜென்ஸியிடம் பணம் கொடுத்தேன் எனக் கூறியுள்ளார்.
குடும்பத்தினர் தான் ஆறுதலாக இருந்தனர்
அப்போது "ஒருநாள் பணம் கட்டிய மும்பை ஏஜென்சி என்னை ஏமாற்றிவிட்டதாக தெரியவந்தது. ரொம்ப அதிர்ச்சியாக இருந்த எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நடுரோட்டில் நின்றபடி என்னுடைய அப்பாவுக்கு ஃபோன் செய்து ஏமாந்துட்டோன் என்று சொன்னேன். அதற்கு அவர் காசு, பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம்.. நீ வீட்டுக்கு வந்துவிடுமா என்று சொன்னார். அப்பா அப்படி சொன்னதுமே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. நான் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு அப்பா தான் கரணம்" எனக் கூறியுள்ளார்.