Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்!
தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவரானார் பிக் பாஸ் நித்யா.
சென்னை: தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான நித்யா, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். தாடி பாலாஜியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் அவர், அந்நிகழ்ச்சியில் பாலாஜியுடன் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகும், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தீரவில்லை. அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே நடந்த சண்டைகள், சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. போட்டி முடிந்த பின்னர் பாலாஜியும் நித்யாவும் நட்புடன் பிரிந்து சென்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், நித்யா சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மும்பையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராம் சரணுக்காக கொள்கையை தளர்த்தும் நயன்தாரா?
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது உள்ளிட்டவை இந்த கட்சியின் முக்கிய நோக்கமாகும்.