Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அரசியலில் குதித்த பிக் பாஸ் நித்யா.. பெண்கள் கட்சிக்கு தலைவரானார்!
தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவரானார் பிக் பாஸ் நித்யா.
சென்னை: தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான நித்யா, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். தாடி பாலாஜியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் அவர், அந்நிகழ்ச்சியில் பாலாஜியுடன் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகும், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தீரவில்லை. அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே நடந்த சண்டைகள், சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. போட்டி முடிந்த பின்னர் பாலாஜியும் நித்யாவும் நட்புடன் பிரிந்து சென்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், நித்யா சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மும்பையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ராம் சரணுக்காக கொள்கையை தளர்த்தும் நயன்தாரா?
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது உள்ளிட்டவை இந்த கட்சியின் முக்கிய நோக்கமாகும்.