என்ன சொல்றீங்க… பிக் பாஸ் பாவனிக்கு கொரோனாவா?... ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால், பாவனியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் பாவனி ரெட்டி. இந்த ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை பெற்றார் பாவனி.

தீவிர ரசிகர்கள்
பாவனியின் கொஞ்சும் தமிழை கேட்பதற்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து பாவனியின் பெயர் நாமினேட் செய்யப்பட்டாலும், பாவனியின் ஆர்மி அவருக்கு வாக்குகளை செலுத்தி காப்பாற்றினார்கள் .பாவனி ரெட்டி 3வது இடத்தை பிடித்ததற்கு அவரின் தீவிர ரசிகர்கள் தான் காரணம்.

அனைவரின் அன்புக்கும் நன்றி
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பாவனி நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியிருந்தார். அதில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்ததும் ஐதராபாத் சென்றுவிட்டேன் என்றார். மேலும், பேசிய அவர், வெளியில் என்னை எப்படி பார்ப்பார்கள். எனக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்களா என குழப்பத்தில் இருந்தேன். ஆனால் வெளியில் வந்ததும் நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்து அசந்து போய் விட்டேன்.அனைவரின் அன்பு, அக்கறை, ஆதரவிற்கு நன்றி என கூறியிருந்தார்.
Recommended Video

ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில், பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா அறிகுறி இருந்ததால் சோதனை மேற்கொண்டதாகவும், சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். பாவனியின் இந்த பதிவை பார்த்த அவரின் தீவிர ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று நேரலையில் பேசிய பாவனி , பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











