Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மூன்றாவது புரமோவிலும் பிரியங்கா தான்.. மூச்சை புடிச்சு கத்தி இந்த சீசனையே நடத்துறாரு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் 58வது நாளின் மூன்று புரமோக்களிலும் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தான் காட்சியளிக்கிறார்.
ஒட்டுமொத்தமாக 58 நாள் புரமோவை பார்த்தாலும் ஒரு 50 நாள் புரமோவிலும் பிரியங்கா தான் ஆட்சி செய்து கொண்டிருப்பார்.
விஷ்ணு விஷால் -சுனைனா நடிப்பில் வெளியான நீர்ப்பறவை… 9 ஆண்டு கொண்டாட்டத்தில் படக்குழு
வீட்டில் அத்தனை போட்டியாளர்கள் இருந்தும் யாருமே கன்டென்ட் கொடுக்காத நிலையில் தனியொருத்தியாக நின்று இந்த சீசனை நடத்திக் கொண்டிருக்கிறார் பிரியங்கா என்றே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மூன்றாவது புரமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த புரமோவிலும் பிரியங்காவை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகி விட்டனர். ஃபேவரிசம் இருக்கலாம் அதற்காக இந்த அளவுக்கு ஃபேவரிசம் எல்லாம் இருக்கக் கூடாது என விஜய் டிவியை கிண்டல் செய்து வருகின்றனர்.
தாமரையை விட்டா அண்ணாச்சி
கடந்த இரு புரமோக்களிலும் பிரியங்கா மற்றும் தாமரை சண்டை காட்டப்பட்ட நிலையில், மூன்றாவது புரமோவில் இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப் பிரச்சனையை எடுத்துக் கொண்டு செய்திக்கான கன்டென்ட்டை கொடுக்க முயற்சிக்கும் பிரியங்கா காட்டு கத்தல் கத்துகிறார்.
அண்ணாச்சி கேள்வி
நிரூப்பை அதிகமாக இந்த வீட்டில் இன்ஃப்ளூயன்ஸ் செய்வது இமான் அண்ணாச்சி தான் என பிரியங்கா பயங்கரமாக வாதாட அதற்கான விளக்கத்தை சொல்லுங்க என இமான் அண்ணாச்சி பிரியங்காவிடமே போட்டு வாங்க பார்த்தார்.
முட்டுக் கொடுத்த அபிஷேக்
அண்ணாச்சியின் கேள்விக்கு பதில் சொல்ல பிரியங்கா ஒரு நொடி யோசித்த நிலையில், செய்தியாளரின் பணி செய்தியை சேகரித்து வருவது மட்டும் தான் என அபிஷேக் ராஜா அழகாக பிரியங்காவுக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றி உள்ளார். ஆனால், பிரியங்கா செய்தியாக சொல்லாமல் இமான் அண்ணாச்சியை டார்கெட் செய்வது போல பேசும் போது அபிஷேக் ஏன் அமைதி காத்தார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாவம் இந்த வாரமும் அபிஷேக் ராஜா தான் அன் அஃபிஷியல் வோட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ளார்.
எல்லா புரமோவிலும்
13 பேர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், எல்லா புரமோவிலும் பிரியங்காவை மட்டுமே ஃபோகஸ் செய்து விஜய் டிவி ஷோவை மொக்கை செய்கிறதா என்றும் அப்படி இல்லை வந்த யாருமே கன்டென்ட் கொடுப்பதில்லை பிரியங்கா மட்டுமே போராடி இந்த சீசனை நடத்தி வருகிறார் என்றும் பங்கமாக பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இரிடேட் ஆகுது
தயவு செய்து டஃப்பான பிசிக்கல் டாஸ்க் கொடுங்க பிக் பாஸ் இருக்கிற போட்டியாளர்கள் அவர்களது திறமையை காட்டி இந்த வீட்டில் இருக்க வேண்டும். வெறுமனே பேசும் டாஸ்க்கை மட்டுமே கொடுத்து போர் அடிக்காதீங்க ரொம்பவே இரிடேட் ஆகுது என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.