Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
3வது திருமணம் செய்து கொள்ளப் போகிறேனா.. டிவிட்டரில் பிக் பாஸ் பிரபலம் விளக்கம்!
தன்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என நடிகை ரேஷ்மா கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: தனது மூன்றாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ரேஷ்மா.
நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி முறை நடிகை ரேஷ்மா. சீரியலில் அறிமுகமான போதும், தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகையாக வலம் வருகிறார். பிக் பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி விட்டார் ரேஷ்மா.
அந்நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சோகங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். இதனால் அவர் மீது ரசிகர்களுக்கு அனுதாபம் ஏற்பட்டது. சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வரும் ரேஷ்மாவை அதிகம் பேர் பின் தொடர்கின்றனர்.
சின்ன வயசு நயன்தாரானு கூப்டாக.. பொங்கிச் சிரிக்கும் "கறுப்பழகி"!
அந்தவகையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலானது. அதில், ஆண் நண்பருடன் நின்றிருக்கும் ரேஷ்மா, வாழ்க்கை தத்துவம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனால் அவரைத் தான் ரேஷ்மா மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அந்த புகைப்படமும் வைரலானது.
ஆனால் அது உண்மையில்லை என தற்போது ரேஷ்மா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகளில் உண்மையில்லை. அவை வெறும் ஊகங்களே. என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.