Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தயங்கிய சாய் பல்லவி.. டக்குன்னு ஓகே சொல்லி கமிட் ஆன ரித்விகா!
சென்னை : வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் திறமையான நடிகை என பெயர் வாங்கியவர் நடிகை ரித்விகா. பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் ஒரு கூத்து, கபாலி, இரண்டாம் உலகின் கடைசி குண்டு போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு பலரின் மனதிலும் நம்ம வீட்டு பொண்ணு என்னும் அளவிற்கு இடம்பிடித்தார் ரித்விகா. அந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் வென்றதை அனைவரும் கொண்டாடினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது புகழ் அதிகரித்து விட்டதால், அதன் பிறகு தனக்கான கேரக்டர்களை மிக கவனமாக தேர்வு செய்ய துவங்கினார் ரித்விகா. இப்போது கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல படங்களில் ரித்விகா கையெழுத்திட்டிருப்பார்.
அதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க!
காமெடி நடிகர் காளி வெங்கட் ஹீரோவாக அறிமகமாகும் படத்தில் ரித்விகா நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் தான் கேட்டுள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டி உள்ளார்.
இதனால் புதுமுக இயக்குனரான பிரம்மா, சாய் பல்லவியை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டாராம். சாய் பல்லவிக்காக எழுதப்பட்ட கேரக்டரில் தான் ரித்விகா நடிக்க போகிறாராம். மாடு என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.
அமலா பாலை வைத்து ஆடை படத்தை தயாரித்த விஜி சுப்ரமணியம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். படத்தின் பூஜை, படப்பிடிப்பு துவங்கும் நாள் போன்றவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம்.