Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயங்கிய சாய் பல்லவி.. டக்குன்னு ஓகே சொல்லி கமிட் ஆன ரித்விகா!
சென்னை : வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் திறமையான நடிகை என பெயர் வாங்கியவர் நடிகை ரித்விகா. பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் ஒரு கூத்து, கபாலி, இரண்டாம் உலகின் கடைசி குண்டு போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு பலரின் மனதிலும் நம்ம வீட்டு பொண்ணு என்னும் அளவிற்கு இடம்பிடித்தார் ரித்விகா. அந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் வென்றதை அனைவரும் கொண்டாடினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது புகழ் அதிகரித்து விட்டதால், அதன் பிறகு தனக்கான கேரக்டர்களை மிக கவனமாக தேர்வு செய்ய துவங்கினார் ரித்விகா. இப்போது கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல படங்களில் ரித்விகா கையெழுத்திட்டிருப்பார்.
அதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க!
காமெடி நடிகர் காளி வெங்கட் ஹீரோவாக அறிமகமாகும் படத்தில் ரித்விகா நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் தான் கேட்டுள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டி உள்ளார்.
இதனால் புதுமுக இயக்குனரான பிரம்மா, சாய் பல்லவியை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டாராம். சாய் பல்லவிக்காக எழுதப்பட்ட கேரக்டரில் தான் ரித்விகா நடிக்க போகிறாராம். மாடு என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.
அமலா பாலை வைத்து ஆடை படத்தை தயாரித்த விஜி சுப்ரமணியம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். படத்தின் பூஜை, படப்பிடிப்பு துவங்கும் நாள் போன்றவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!