Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தயங்கிய சாய் பல்லவி.. டக்குன்னு ஓகே சொல்லி கமிட் ஆன ரித்விகா!
சென்னை : வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் திறமையான நடிகை என பெயர் வாங்கியவர் நடிகை ரித்விகா. பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் ஒரு கூத்து, கபாலி, இரண்டாம் உலகின் கடைசி குண்டு போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு பலரின் மனதிலும் நம்ம வீட்டு பொண்ணு என்னும் அளவிற்கு இடம்பிடித்தார் ரித்விகா. அந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் வென்றதை அனைவரும் கொண்டாடினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது புகழ் அதிகரித்து விட்டதால், அதன் பிறகு தனக்கான கேரக்டர்களை மிக கவனமாக தேர்வு செய்ய துவங்கினார் ரித்விகா. இப்போது கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல படங்களில் ரித்விகா கையெழுத்திட்டிருப்பார்.
அதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க!
காமெடி நடிகர் காளி வெங்கட் ஹீரோவாக அறிமகமாகும் படத்தில் ரித்விகா நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் காளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் தான் கேட்டுள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டி உள்ளார்.
இதனால் புதுமுக இயக்குனரான பிரம்மா, சாய் பல்லவியை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டாராம். சாய் பல்லவிக்காக எழுதப்பட்ட கேரக்டரில் தான் ரித்விகா நடிக்க போகிறாராம். மாடு என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.
அமலா பாலை வைத்து ஆடை படத்தை தயாரித்த விஜி சுப்ரமணியம் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். படத்தின் பூஜை, படப்பிடிப்பு துவங்கும் நாள் போன்றவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம்.