அடுத்து யாரை தடவலாம்னு யோசிக்கிறாரோ?..கோலாரை திட்டிதீர்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளரை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 6 கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்கள் இந்த முறை பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களின் பெயர்களை நினைவில் வைக்க கூட சற்று கடினமாக இருக்கிறது.
ஒரு சிலிரைத்தவிர மற்றவர்கள் முகம் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள். ப்ரோமோவில் கூட அவர்கள் வருவதில்லை.

அசல் கோலார்
வந்ததுமே ஆயிஷாவிடம் டா போட்டு கூப்பிடாதே அது எனக்கு பிடிக்காது என்று பேசி இருந்தார். இதனால், உண்மையில் அசல் கோலாரு பெயருக்கு ஏற்றார் போல அசல் கோலாராகத்தான் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கண்டனம் தெரிவித்தனர்
நேற்று முன் போட்டியாளர் குவின்ஸியிடம் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்தனர். அதுமட்டுமின்றி நிவாஷினி மற்றும் ஆயிஷா ஆகியோரிடம் அசல் தவறாக நடந்து கொள்வதாக போட்டோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

அடுத்து யாரை தடவலாம்
அவரை வீட்டை விட்டே வெளியே அனுப்ப வேண்டும் என்றும் கண்டன குரல்கள் வலுத்து வருகின்றது. பெண் போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அசல் கோலாரின் போட்டோவை போட்டு அடுத்த யாரை தடுத்து யாரை தடவலாம் என்று யோசிக்கிறார் போல.

வெளியில் அனுப்புங்கள்
குயின்ஸி, மகேஷ்வரி, நிவாஷினியிடம் நீச்சல் குளத்தில் படுத்துக்கொண்டு அவருக்கு நூல் விட்டுள்ளார். இதைப்பார்த்த, நெட்டிசன்கள் அவருக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்
அந்த பக்கம் ரச்சிதா மகாலட்சுமி இந்த பக்கம் விஜே மகேஷ்வரி நடுவுல போய் போய் நந்திமாதிரி உங்காந்து கொண்டு, மகேஷ்வரியின் காலை நொண்டிக் கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்து கடுப்பான ஒரு இணையவாசி, எப்போ பாரு யாரையாவது தடவிட்டே இருக்கான். இவன் இப்படி பண்ணதும் மகேஷ்வரி காலை கீழ போட்டுட்டாங்க. அவன சீக்கிரம் வெளியில அனுப்புங்க அப்பத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி உருப்புடும் என பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











