பிக் பாஸ் சுருதி, மதுமிதாவின் ரணகளமான போட்டோ… என்னத்த சொல்ல… நீங்களே பாருங்க !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்துள்ளது. இதில், ஆரம்பம் முதலே நம் மனதை கவர்ந்த ராஜூ டைட்டில் வின்னராகி 50 லட்சம் பரிசுத் தொகையை தட்டிச்சென்றார்.
பிரியங்கா இரண்டாவது இடத்தையும், பாவனி ரெட்டி மூன்றாவது இடத்தையும், அமீர் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒருவர் ஒருவராக பேட்டி அளித்து வரும் நிலையில், மாடல் அழகியான சுருதியும் , ஜெர்மனியைத் சேர்ந்த மதுமிதாவும் ரணகளமான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி அமோகமாக துவங்கியது. கடந்த நான்கு சீசனை விட, போட்டியாளர்கள் தேர்வு இந்த முறை வித்தியாசமாகவே இருந்தது. அதே போல் எப்போதும் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.

சுருதி பெரியசாமி
இதில், விளையாட்டு வீராங்கனையும், மாடலுமான சுருதி பெரிய சாமி கலந்து கொண்டார். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய சுருதி, பஞ்சதத்திர காயின் டாஸ்கின் போது தாமரையின் நாணயத்தை, பாத்ரூமில் திருடியதால் ரசிகர்களிடம் கெட்டபெயர் எடுத்தார். இதையடுத்து, அந்த வரமே குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

மதுமிதா
அதேபோல, ஜெர்மனியை சேர்ந்த மதுமிதாவும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கினார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடையவராக இருக்கிறார். இவரின் கொஞ்சும் தமிழை ஏராளமானோர் ரசித்து கேட்டனர்.

ரணகளமான போட்டோ
இந்நிலையில், சுருமி பெரியசாமி மற்றும் மதுமிதா இருவரும் கையில் கண்ணாடி கிளாசுடன் போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னடாக மதுபானா விளம்பரமா என யோசித்து ஆர்வத்துடன் வாயியை பிளந்து பார்த்தா, it's only Green Tea என பதிவிட்டுள்ளனர். இருப்பினும் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு ரணகளமாத்தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











