குழந்தை பெத்துக்க ரெடி ஆகிட்டோம்.. வெட்கத்துடன் கன்னிகா கூறிய அந்த விஷயம்!
சென்னை: தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் காதல் ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நேற்று இவர்களின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது குழந்தை பெத்துக்க ரெடி ஆகிட்டோம் என்று வெட்கத்துடன் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சினேகன் அவர்கள் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறது. இவர் 2500 பாடலுக்கு மேல் பாடல்களை எழுதி இருக்கிறார். அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 1: இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடம் பிடித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் கமலின் கட்சியில் இணைந்தார். இதனிடையே சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் - கன்னிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சயாக இவர்களின் திருமணம் நடந்தது. கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'கல்யாண வீடு' என்ற தொடரில் நடித்திருந்தார். பின் இவர் தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு, இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புகள் கிடைத்து வருகிறது.
குழந்தை பெத்துக்க ரெடி: அந்த வகையில், நேற்று இவர்கள் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சினேகன் கன்னிகா இருவரும் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயார் ஆகிட்டோம் " உன்ன மதி ஒரு பொண்ணு பெத்து கொடுத்துட்டு நீ கெளம்பிட்டே இருன்னு சொல்றேன்" என சினேகன் கூற கன்னிகா வெட்கத்தில் சிரித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











