சூப்பரான பரிசுடன் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள்.. அப்படி என்ன பரிசு தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஏகப்பட்ட புத்தம் புது விஷயங்கள் அரங்கேறி உள்ளது.
ரசிகர்கள் எல்லாம் விர்ச்சுவலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கரவொலி எழுப்பி வருகின்றனர்.
தனியாளாக நின்று கேமரா மூலமாக உலக மக்களை சந்தித்து பேசுகிறார் கமல்ஹாசன். இந்த நியூ நார்மலுக்கு தன்னை மாற்றிக் கொண்டார் நம்மவர்.
முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ், இரண்டாவது போட்டியாளராக சனம் ஷெட்டி மற்றும் மூன்றாவது போட்டியாளராக நடிகை ரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இந்த முறை வீட்டிற்கு ஒரு அழகான பரிசை கொண்டு செல்கின்றனர்.
அது என்ன வென்றால், அழகான பூச்செடி தான். க்ரீன் இந்தியா சேலஞ் போல அழகிய புந்தோட்டம் ஒன்றை விரைவிலே பிக்பாஸ் வீட்டில் அமைத்து விடுவார்கள் என்றே தெரிகிறது.
அந்த பூச்செடியை எடுத்துக் கொண்டு எந்த இடத்தில் வைப்பது என நடிகர் ரியோ ராஜ் தவித்த தவிப்பெல்லாம் பிக்பாஸ் ரசிகர்களை வாய் விட்டு சிரிக்க வைத்தது.


Click it and Unblock the Notifications











