twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உனக்கு இப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்து பல பேரு பாவத்த சம்பாதிச்சிருக்கான்.. அபிஷேக்கால் கதறும் தாமரை!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

    பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. இதில் முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது.

    வாலி, நாகேஷ் வறுமையில் வாடும் போது சோறு ஆக்கி போட்டவர் ஸ்ரீகாந்த்.. நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி!வாலி, நாகேஷ் வறுமையில் வாடும் போது சோறு ஆக்கி போட்டவர் ஸ்ரீகாந்த்.. நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி!

    இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னமும் இந்த டாஸ்க் தொடருகிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோவில் நாடகக் கலைஞரான தாமரை செல்வி தனது கதையை பகிர்ந்துகொண்டது தெரியவந்தது.

    கதறி அழுத தாமரை

    கதறி அழுத தாமரை

    இதில்தனது மகனை பார்த்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. தன்னிடம் தன் மகனை காட்டவில்லை என கூறி கதறினார். தான் தவறு செய்துவிட்டதாக தன் மகன் நினைத்து கொண்டிருப்பதாகவும் தன்னை பார்க்க வரவில்லை என்றும் போனில் கூட பேசுவதில்லை என்றும் உடைந்து அழுதார்.

    கதை சொன்ன அபிஷேக்

    கதை சொன்ன அபிஷேக்

    தாமரை செல்வி கதறுவதை பார்த்து சின்னப்பொண்ணு, பிரியங்கா உள்ளிட்டோரும் கண்ணீர் விட்டனர். இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவில் அபிஷேக் ராஜா தான் பட்ட கஷ்டங்களை உருக்கமாகவும் ஊக்குவிக்கும் வகையிலும் பேசுகிறார்.

    யாரோ பண்ண முடிவு இல்ல

    யாரோ பண்ண முடிவு இல்ல

    இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் ஹால் ஏரியாவில் அமர்ந்திருக்கிறார் தாமரை செல்வி. அவருடன் பாவனி ரெட்டி, ஐக்கி பெர்ரி ஆகியோர் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு வரும் அபிஷேக் ராஜா, நீ இந்த ஷோவுக்கு வர்றது யாரோ ஒருத்தர் பண்ண முடிவு இல்ல.

    உன் கதையை உரக்க சொல்லணும்

    உன் கதையை உரக்க சொல்லணும்

    பல பேரோட முடிவு.. அந்த முடிவு எதுக்காகன்னா... உன் கதையை உரக்க சொல்லணும் இந்த உலகத்துக்கு... உன் மகன் கண்டிப்பா உன்கிட்ட வரத்தான் போறான். அதுல மாற்றுக் கருத்தே கிடையாது. ஒரு தாயோட குமுறல் அது.. எவன் பேசி எவன மனசுல ஒட்டுச்சோ இல்லையோ தெரியல.. உன் பேச்சு பல பேர போய் சேர்ந்திருக்கும்.

    பல பேரு பாவத்த சம்பாதிச்சிருக்கான்

    பல பேரு பாவத்த சம்பாதிச்சிருக்கான்

    நீ ஜெயிச்சே ஆகணும்... உனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்து பல பேரு பாவத்த சம்பாதிச்சிருக்கான் வாழ்க்கையில என்று கூறுகிறார் அபிஷேக். இதனைக் கேட்ட தாமரை செல்வி கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அவரை ஹவுஸ்மேட்ஸ் கட்டியணைத்து ஆசுவாசப்படுத்துகின்றனர். இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ.

    English summary
    Bigg boss Tamil 5: Today's 3rd promo has been released. Abhishek supports Thamarai Selvi after listening her past.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X