Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிபி ரூ. 12 லட்சம் பெட்டியை தூக்க ரியல் காரணம் இதுதானா? 3வது புரமோவால் வெளியான ரகசியம்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து ரூ. 12 லட்சம் பெட்டியுடன் ரன் ஆகி உள்ளார் சிபி புவன சந்திரன்.
ரூ. 11 லட்சம் பெட்டி வரும் போது அமீர் அதை எடுக்கப் போவதாக சொல்லி சிபியை பிராங்க் பண்ண நிலையில், ரூ. 12 லட்சம் வந்த உடன் சிபி அதை எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளார்.
சிபியின் இந்த மூவை ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மற்றவர்களுக்கு இந்த கேமை சரியாக விளையாட தெரியவில்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.
நோ உப்பு... நோ சர்க்கரை.. பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்… குழம்பிய ஹவுஸ்மெஸ்ட் !

ரியல் ரன்னர் அப்
பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ஒரே ஒரு டைட்டில் வின்னர் தான். ரன்னர் அப் என்பது கமல் தன்னுடன் மேடையில் அழைத்துக் கொண்டு சென்று ஒரு கையை விட்டு மறு கையை உயர்த்தி ஏமாற்றுவதற்காக இருக்கும் பொம்மை அல்ல என்றும் பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்பவர் தான் ரியல் ரன்னர் அப் என சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தாமரையிடம் கடைசியாக கேட்ட சிபி
உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள். நான் விட்டு விடுகிறேன். இல்லை என்றால் நான் எடுத்துக் கொண்டு போய் விடுவேன் என சிபி ஓப்பனாக சொல்லும் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி உள்ளது. இன்னமும் தாமரை கேம் பற்றிய புரிதல் இல்லாமல் பெட்டியை எடுக்காமல் உள்ளாரே என அவரது ரசிகர்களே தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

பிராங்க் பண்ண அமீர்
ரூ. 11 லட்சம் வரும் போது சிபியிடம் தான் தான் பெட்டியை எடுத்துக் கொண்டு போவதாக சொல்லி கடைசியில் பிராங்க் பண்ணேன் சிபி என வெறுப்பேற்றி விட்டார். பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை யாரும் பெட்டியை எடுக்கப் போவதில்லை என்றும் இன்னமும் பெரிய தொகைக்காக சிலர் காத்திருக்கின்றனர் என நினைத்த சிபி சரியான முடிவுடன் தற்போது வெளியேறி உள்ளார்.

நிரூப் தான் காரணம்
ராஜு ஜெயமோகனை நாமினேட் செய்யாமல் சிபியை நாமினேட் செய்த நிரூப் தனது நாமினேஷனை வீணடிக்க விரும்பவில்லை. எப்படி இருந்தாலும் இந்த வாரம் நீ தான் வெளியே போயிடுவ என சிபியின் கான்ஃபிடன்ஸை உடைத்ததால் தான் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து சிபி அதுவும் மற்றவர்கள் யாரும் இதுவரை எடுக்காத நிலையில் எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளார் என ரசிகர்கள் மூன்றாவது புரமோவை பார்த்தும் சிபி செய்தது சரி தான் என பாராட்டி வருகின்றனர்.