Don't Miss!
- News
மாதா, பிதா, குரு, தெய்வம், மனைவிக்கு மரியாதை..கல்லூரி விழாவில் பாஜக தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடேங்கப்பா... நிரூப்பிற்கு வித்தியாசமான பரிசளித்த கமல்… என்ன கிஃப்ட் தெரியுமா ?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடந்து வருகிறது.
இதில் நிரூப்பிற்காக கமலஹாசன் வித்தியாசமான நினைவு பரிசை வழங்கி அவரை மகிழ்வித்தார்.
பைக்கில் உள்ளே வந்த மூவர்.. பாவனியை இப்படி பிக்கப் பண்ணிட்டு போயிட்டாங்களே.. 2வது ரன்னர் அப்!

விறுவிறுப்புடன்
கடந்த ஆண்டு தான் அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பும் இந்த சீசனில் கொடுக்கப்பட்டது.

டைட்டில் வின்னர் யார்
பிரியங்கா, பவானி, ராஜு, நிரூப், அமீர் என இந்த பேரும் தான் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது சற்று நேரத்தில் தெரியாவந்துவிடும். ராஜூமோகன் தான் பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் ஆனார் என்ற இணையத்தில் உலாவந்த நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் சில மணி நேரங்களில் தெரியவந்துவிடும்.

நடிகரான ஆசை
இறுதிவரை சிறப்பாக விளையாடி 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்த நிரூப் முதல் நபராக வெளியேற்றப்பட்டார். அவரை நடினமாடியபடி வந்த டான்சர்கள் அவரின் கண்களை தட்டிவிட்டு நிரூப்பை அழைத்துச் சென்றனர். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து நிரூப் வெளியேறினார். கமலிடம் பேசிய நிரூப், இந்த ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார். ஒரு பெரிய நடிகராக வேண்டும் என்பது எனது ஆசை இருப்பதாக கூறினார்.

கமலின் பரிசு
நிரூப், பிரியங்கா, அமீர், ராஜு, பாவனி என அனைவருக்கும் இன்று கமல் நினைவு பரிசுகளை வழங்கினார். அதில் போட்டியாளர்களுக்கு பிடித்த மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையும் படி பல பரிசு வழங்கினார். அதில், நிரூப்பிற்கு தொப்பியை பரிசாக வழங்கினார்.

வித்தியாசமான பரிசு
பிக் பாஸ் வீட்டில் எப்போதும் நீண்ட முடியுடன் இருந்த நிரூப்பிற்கு ஏற்றபடி தொப்பியை நினைவு பரிசாக அளித்தார். மேலும், இந்த பரிசு நீங்க நீண்ட முடி வைத்து இருக்கும் போது வாங்கியது. நீங்க இப்போது முடியை வெட்டி விட்டீர்கள் என்று கூறினார். கமலின் வித்தியாசமான பரிசை பார்த்து மகிழ்ந்தார் நிரூப் .