Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அடேங்கப்பா... நிரூப்பிற்கு வித்தியாசமான பரிசளித்த கமல்… என்ன கிஃப்ட் தெரியுமா ?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடந்து வருகிறது.
இதில் நிரூப்பிற்காக கமலஹாசன் வித்தியாசமான நினைவு பரிசை வழங்கி அவரை மகிழ்வித்தார்.
பைக்கில் உள்ளே வந்த மூவர்.. பாவனியை இப்படி பிக்கப் பண்ணிட்டு போயிட்டாங்களே.. 2வது ரன்னர் அப்!
விறுவிறுப்புடன்
கடந்த ஆண்டு தான் அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை இல்லாத பல மாற்றங்களை இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு வாய்ப்பும் இந்த சீசனில் கொடுக்கப்பட்டது.
டைட்டில் வின்னர் யார்
பிரியங்கா, பவானி, ராஜு, நிரூப், அமீர் என இந்த பேரும் தான் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பது சற்று நேரத்தில் தெரியாவந்துவிடும். ராஜூமோகன் தான் பிக் பாஸ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் ஆனார் என்ற இணையத்தில் உலாவந்த நிலையில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் சில மணி நேரங்களில் தெரியவந்துவிடும்.
நடிகரான ஆசை
இறுதிவரை சிறப்பாக விளையாடி 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்த நிரூப் முதல் நபராக வெளியேற்றப்பட்டார். அவரை நடினமாடியபடி வந்த டான்சர்கள் அவரின் கண்களை தட்டிவிட்டு நிரூப்பை அழைத்துச் சென்றனர். இதையடுத்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து நிரூப் வெளியேறினார். கமலிடம் பேசிய நிரூப், இந்த ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார். ஒரு பெரிய நடிகராக வேண்டும் என்பது எனது ஆசை இருப்பதாக கூறினார்.
கமலின் பரிசு
நிரூப், பிரியங்கா, அமீர், ராஜு, பாவனி என அனைவருக்கும் இன்று கமல் நினைவு பரிசுகளை வழங்கினார். அதில் போட்டியாளர்களுக்கு பிடித்த மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையும் படி பல பரிசு வழங்கினார். அதில், நிரூப்பிற்கு தொப்பியை பரிசாக வழங்கினார்.
வித்தியாசமான பரிசு
பிக் பாஸ் வீட்டில் எப்போதும் நீண்ட முடியுடன் இருந்த நிரூப்பிற்கு ஏற்றபடி தொப்பியை நினைவு பரிசாக அளித்தார். மேலும், இந்த பரிசு நீங்க நீண்ட முடி வைத்து இருக்கும் போது வாங்கியது. நீங்க இப்போது முடியை வெட்டி விட்டீர்கள் என்று கூறினார். கமலின் வித்தியாசமான பரிசை பார்த்து மகிழ்ந்தார் நிரூப் .