Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பைக்கில் உள்ளே வந்த மூவர்.. பாவனியை இப்படி பிக்கப் பண்ணிட்டு போயிட்டாங்களே.. 2வது ரன்னர் அப்!
சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் 2வது ரன்னர் அப்பாக வெளியேறினார் பாவனி ரெட்டி.
கடந்த சீசனில் நடைபெற்றது போல முந்தய சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாருமே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இந்த முறை போட்டியாளர்களை அழைத்துச் செல்லவில்லை.
அதற்கு பதிலாக வேறு விதமாக ஒவ்வொரு போட்டியாளர்களாக எலிமினேட் செய்யப்பட்டனர்.
பழைய சாதத்தை பரிமாறும் பிக் பாஸ்.. மீண்டும் மீண்டும் பயண வீடியோவா.. அட போங்க பாஸ் முடியல!
5வது இடத்தில் நிரூப்
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை 6.30 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அதில், நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து நிரூப் நந்தகுமார் கண்ணைக் கட்டியபடியே வெளியேற்றப்பட்டார். டாப் 5 ஃபைனலிஸ்ட்டாக இடம்பெற்ற நிரூப் 5வது இடத்தில் வெளியேறினார்.
அமீருக்கு ஏமாற்றம்
அமீர் தான் அன் அஃபிஷியல் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ளார் என கூறப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நிரூப் வெளியேறிய நிலையில் 4வது இடத்தில் ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்து அமீர் வெளியேற்றப்பட்டார். தனது எலிமினேஷனை சற்றும் அமீர் எதிர்பார்க்காத நிலையில், பலத்த ஏமாற்றம் அடைந்தார்.
இரண்டாவது ரன்னர் அப்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அழகு பதுமையாக கலந்து கொண்ட பாவனி மொழி தடைகளை தாண்டி 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாதித்து விட்டார். அபிநய் உடன் லவ் டிராக், அமீருடன் முத்த சர்ச்சை என ஏகப்பட்ட அப்ஸ் அண்ட் டவுன்ஸ்களை கடந்த பாவனி இளைஞர்களின் மிகப்பெரிய சப்போர்ட் உடன் 2வது ரன்னர் அப் ஆகி உள்ளார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் பைக்
ஒவ்வொரு வெளியேற்றத்தையும் வித்தியாசமான முறையில் இந்த சீசனில் நடத்தினர். மூன்றாவது நபராக பாவனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற 3 பைக்குகள் பிக் பாஸ் வீட்டுக்கே வந்தன. அதில், ஃபைனலிஸ்ட்டான பிரியங்கா, ராஜு மற்றும் பாவனி ஏறிய ரவுண்ட் அடித்தனர்.
பைக்கில் பிக்கப்
மூன்று பைக்குகள் ரவுண்ட் அடித்த நிலையில், ஒரு பைக்கில் பாவனியை பிக்கப் செய்த நபர் அப்படியே அவரை வெளியே கொண்டு சென்று விட்டார். கமல் முன்னிலையில், வந்து நின்ற பாவனியிடம் கை விரல் எப்படி இருக்கிறது என விசாரித்த கமல் அவரை பாராட்டியது பாவனி ஆர்மியனரை உற்சாகப்படுத்தியது.