Don't Miss!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இது இண்டர்வெல் இல்ல.. இதுதான் உங்கள் எல்லோருக்கும் முதல் சீன்.. ராஜுவை பாராட்டிய கமல் ஹாசன்!
சென்னை: ராஜு கதை சொன்ன விதம் தனக்கு பிடித்திருந்ததாக கூறிய கமல் இந்த நிகழ்ச்சிதான் உங்களின் முதல் சீன் என்று கூறி பாராட்டினார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டனர்.
ராஜு பண்றது தாங்க முடியல...புறம் பேச துவங்கிய பிரியங்கா – அபிஷேக்
பிரியங்கா கூறிய ஸ்டோரி
இந்நிலையில் இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் கூறிய கதைகள் குறித்து பேசினார் கமல்ஹாசன். அப்போது பிரியங்கா கூறிய கதை குறித்து பேசிய கமல், பிரியங்காவின் அப்பா ரயிலில் உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்ட போது அங்கிருந்த யாருமே அவருக்கு உதவி செய்யாமல் போனது குறித்து பேசினார்.
உதவி செய்யாமல் செல்பி எடுப்பார்கள்
மேலும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற அவர், தன்னுடைய அரசியல் பயணத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் இருந்ததில்லை என்றும் சில பேர், விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடப்பார்கள் அப்போது அவருக்கு உதவி செய்யாமல் செல்பி எடுப்பார்கள் என்றும் கூறி தனது வேதனையை பதிவு செய்தார்.
ராஜு கதை சொன்ன விதம்
மேலும் பிரியங்காவின் கதையில் இருந்து நாம் கற்றுக்கொண்ட் நீதி, இதுபோன்று இருக்கக்கூடாது என்பதுதான் என்றும் கூறினார் கமல். தொடர்ந்து ராஜுவின் கதை குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ராஜு கதை சொன்ன விதம் தனக்கு பிடித்ததாக கூறினார்.
இதுதான் உங்களின் முதல் சீன்
மேலும் கதையில் இது இண்டர்வெல் என்று நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கமல், இதுதான் உங்களின் முதல் சீன் என்றார். மேலும் போட்டியாளர்கள் அனைவருக்குமே இந்த வீடும் இந்த நிகழ்ச்சியும்தான் முதல் சீன் என்ற கமல்.
சாண்டி சொன்ன கதை
இதன் பிறகு உங்கள் வாழ்க்கை வேறு மாதிரி இருக்கும் என்றும் கமல்ஹாசன் கூறினார். மேலும் ராஜு கதை இனி வேற கதையாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் ராஜு கதை குறித்து பேசும் போது, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாண்டி சொன்ன கதையை நினைவு கூர்ந்த கமல் அவர் அப்போது கூறிய கதை தனக்கு ரொம்ப பிடித்ததாக கூறினார்.