Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா... இதயத்தை கொடுத்தோமே.. கமல் அதிர்ச்சி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறிய நிலையில் அவர் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீசனில்தான் திருநங்கை ஒருவர் பங்கேற்றார். திருநங்கை நமீதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் டாஸ்க்காக ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் கொடுக்கப்பட்டது.
மருத்துவ காரணங்களுக்காக வெளியேறிய நமீதா மாரிமுத்து....உறுதிப்படுத்திய சுதா மம்மி
சாப்பாட்டில் விஷம்
இதில் பேசிய நமீதா மாரிமுத்து தான் திருநங்கையாக மாறியதும் தன் குடும்பத்தாலும் சமூகத்தாலும் சந்தித்த துயரங்களை கூறினார். குடும்பத்தினரே தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்ததும் அடியாட்களை வைத்து அடித்து துன்புறுத்தியது என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
கண்ணீர்விட்ட ரசிகர்கள்
திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாக இருப்பதற்கும் பிச்சை எடுப்பதற்கும் அவர்களின் பெற்றோர் தான் காரணம் என்று கண்ணீர்விட்டார். நமீதா பகிர்ந்த தகவல்கள் பலரையும் கண்கலங்க வைத்தது. பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களும் நமீதாவின் கதையை கேட்டு கண்ணீர் விட்டனர்.
ரூடாக பேசிய நமீதா
சமூக வலைதளங்களில் தங்களின் ஆதரவு நமீதாவுக்கே என பலரும் தெரிவித்து வந்த நிலையில் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். நேற்றைய எபிசோடில் தாமரை செல்வியிடம் மல்லுக்கட்டினார். தாமரை செல்வி வெள்ளந்தியாக பேசி சிரித்தற்கே டென்ஷன் ஆகி ரொம்பவே ரூடாக பேசினார் நமீதா மாரித்து.
தவிர்க்க முடியாத காரணங்களால்
இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசனுடன் தொடங்கியது நிகழ்ச்சி. ஓபனிங்லேயே நமீதா மாரிமுத்து வெளியேறியது குறித்து பேசினார் பிக்பாஸ். அதாவது சில தவிர்க்க முடியாத காரணத்தால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.
நமீதா மருத்துவமனையில் அனுமதி
அதற்கு முன்னதாகவே நமீதா வெளியேறிய தகவல் சமூக வலைதளம் மூலம் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நமீதா தானாக வெளியேறினாரா? அல்லது ஏதேனும் பிரச்சனையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் நமீதாவுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மீண்டும் வருவார் நமீதா
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், நமீதா வெளியேறியது அதிர்ச்சியாக உள்ளது என்று கூறினார். அவரது சமூதாயத்தை பற்றி குரல் கொடுத்தவர், இதயத்தை கொடுத்தோம் வெளியேறியது வருத்தம் தான் என்றும் நடிகர் கமல் ஹாசன் கூறினார். இதனிடையே நமீதா மாரிமுத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என்றும் தகவல் பரவி வருகிறது.
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
-
ஒரு ஊருக்கே கிடா விருந்து.. மகள், மாப்பிள்ளைக்கு தடபுடலாக வந்த உணவு.. அமர்களப்படுத்திய ரோபோ ஷங்கர்!