Don't Miss!
- News 320 ஆக உயர்ந்த சர்க்கரை அளவு.. திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு முதல் முறையாக இன்சுலின் ஊசி
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கத்தை இப்போ வாங்கலாமா..?
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்ன புத்தி இது… நாளுக்கு நாள் டேமேஜாகும் பிரியங்காவின் இமேஜ் !
சென்னை : பிக் பாஸ் வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும், ப்ரோமோவில் அதிகமாக வருவது என்னமோ பிரியங்கா தான். தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவிலும் பிரியங்கா தான் பிரதான இடத்தை பிடித்துள்ளார்.
அன்பாக பழகி வந்த தாமரை, பிரியங்கா இருவரும் தற்போது எலியும் பூனையுமாக மாறி உள்ளனர்.
தாமரையை சீண்டி வம்பு இழுப்பதையே முதல் வேலையாக செய்து வருகிறார். பிரியங்கா.
அமீர்கானுக்கு நடந்த அதே பிரச்சனை இப்போ மோகன்லாலுக்கும்.. மரைக்காயர் படம் எப்படி இருக்கு?
கத்தியில் குத்துவியாம்
பிக் பாஸ் வீட்டில் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோவில், கத்தியை எடுத்து குத்திட்டு.. அதுவும் டாஸ்க் என சொல்லுவியா...என் மனசை பாதிக்கும்னு தெரிஞ்சிதான் நீ பேசுற என்று ஆக்ரோஷமாக கத்துகிறார் தாமரை.
பிரியங்கா அப்படித்தான்
இந்த ப்ரோமோவை பார்த்த இணையவாசிகள் பிரியங்காவை விளாசி வருகின்றனர். பிரியங்கா கேரக்டர் எப்படினா, ஒன்னு அவ கூடவே ட்ராவெல் பண்ணனும் இல்லை அவளுக்கு அடிமையா இருக்கனும். அவளை யாராவது எதிர்த்து பேசினாலோ அவளைய வீட டாமினேட் பண்னாளோ அவளால ஏத்துக்க முடியாது. எனபதிவிட்டுள்ளார்.
என்ன கேரக்டர்
மற்றொரு இணையவாசி கோவம் வரமாதிரி பேசிட்டு அப்புறம் நல்லவ போல கட்டிப்புடிச்சி முத்தம் கொடுப்பது என்ன கேரக்டர் என மீம்ஸ் கோட்டு கலாய்த்துள்ளார்.
தாமரையை சீண்டிகிட்டே இருக்கா
பிரியங்காவின் அடாவடி பேச்சை பார்த்து கடுப்பான ஒரு நெட்டிசன், நம்மளும் இந்த பிரியங்காவை அர்ச்சனா மாதிரி அன்பு பாயாசம்னு நினைச்சோம். ஆனா இவ அவங்களையே தூக்கி சாப்புட்ருவா. வீட்டில் இருக்க ஒரே தமிழ் பெண் தாமரைதான். அவங்களை சூடேத்தி கிட்டே இருந்தால் போதும்னு ஸ்கேச் போட்டு தாமரையை சீண்டிகிட்டே இருக்கா. இதுக்கு அந்த சுவாரஷ்ய சைக்கோவும் உடந்தை. எனபதிவிட்டுள்ளார்.
கடுப்பாகுது
யாரை உசுப்பேற்றினால் பிரச்சனை வரும், பரோமோவில் வரலாம் என்று விளையாடுவது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தான் தரும். அதுவும் திரும்ப திரும்ப ஒருவரையே ஒரே விஷயத்தை சொல்லி சொல்லி அழ வைப்பது என்ன மாதிரி விளையாட்டுன்னு தெரியல. அதுவும் பிரியங்கா கொடுக்கும் முகபாவனைகள் மேலும் கடுப்பு. என பதிவிட்டுள்ளார்.
கோவம் வருதா
மற்றொரு இணையவாசி, பிரியங்கா, நிரூப் நட்பை கிண்டல் பண்ணலாம் ஆனால் நீங்க சிபிக்கும் எனக்கும் இருக்கும் பாசத்தை கிண்டல் பண்ண கூடாது. உண்மைய சொன்னா கோவம் வரும்தான் மேடம் நீங்க பத்த வைச்ச நெருப்புதான் இப்போ சுடுதுனா என்ன பண்ணுறது. என பதிவிட்டுள்ளார்.