Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டிஆர்பிக்காக நீ இப்படிலாம் கூட பேசுவியா… அபிஷேக்கை விளாசும் நெட்டிசன்ஸ் !
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில், அபிஷேக் , மக்கள் எனக்கு பிச்சைப்போட்டு மீண்டும் இங்கே என்னை அனுப்பி இருக்காங்க, அவங்க எதிர்பார்க்கும் சுவாரசியத்தை என்னை கொளுத்திக்கொண்டு கொடுப்பேன் என்று கூறுகிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், அபிஷேக்கை கலாய்த்து வருகின்றனர்.
மக்கள் எதிர்பார்க்கிற சுவாரஸ்யத்தை என்னை கொளுத்திட்டு கொடுப்பேன்.. நிரூப்பிடம் ஆவேசமான அபிஷேக்!
சண்டை
பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தம்பியா பழகிய அண்ணாச்சி நிரூப் நட்பில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாச்சியின் தலைவர் பதவியை நாணயத்தை பயன்படுத்தி நிரூப் பறித்துகொண்டதால் அண்ணாச்சி கலங்கிப்போனார். இதையடுத்து, இரண்டு நாளாக வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
3வது ப்ரோமோ
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், அபிஷேக், நிரூப்பிற்கு அறிவுரை கூறுகிறார். பாவ்னியை இந்த வாரம் காயினை யூஸ் பண்ண சொல்லிட்டு, அண்ணாச்சி ஹர்ட் பண்ணாம அடுத்த வாரம் நீ கேப்டன் ஆகி இருக்கலாம். அன்பு கொடுப்பதில் லாஜிக் பாக்குறியா. நான் இருக்கும் போதும் நிரூப், பிரியங்கா பத்தி பேசுனாங்க இப்போ 60 நாள் ஆய்டுச்சி இப்பவும் அதே தான். மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்காங்க, அவங்க எதிர்பார்க்கும் சுவாரசியத்தை என்னை கொளுத்திக்கிட்டு கொடுப்பேன்டா என்று கூறுகிறார் அபிஷேக்.
இந்த வாரம் நீதான்
இந்த ப்ரோமோவை பார்த்த இணையவாசிகள், என்னது..நீ கொளுத்திட்டு மக்களுக்கு சுவாரஸ்யம் கொடுப்பியா? முதல்ல இந்த வார எவிக்ஷ்னிலிருந்து தப்பிக்கிறயான்னு பாருடா ஈர வெங்காயம். விஜய்டிவி டிஆர்பிக்காக வேணும்னா உன்னை உள்ள இருக்க வச்சு இந்த வாரம் வேற யாரையாவது பலி கொடுப்பானுகளே தவிர மக்கள் உன்னை என்றுமே ஏத்துக்க மாட்டாங்கடா...பேப்பயலே. என பதிவிட்டுள்ளார்.
இன்னும் 33நாள் தான்
3வது ப்ரோமோவில் அபிஷேக் கூறிய கருத்தால்,காண்டான ஒரு நெட்டிசன், மக்கள் மூணு வாரத்தில் அனுப்பியாச்சு இவரை, என்னமோ மக்கள் போட்ட பிச்சையில் உள்ளே வந்தேன் என்கிறான். சரி சரி மூணு நாள் மட்டும் தான் இருக்கு முடிஞ்சா சுவாரஸ்யம் கொடுப்பதாக கனவு கண்டுகொண்டு இரு...சனிக்கிழமை வரை.. என பதிவிட்டுள்ளார்.
முழுப்பைத்தியம்
ஒரு நெட்டிசன், உண்மையில் மொபைல், டிவி, கடிகாரம் எதுவுமே இல்லாமல் வீட்டில் கொஞ்சம் மனசு பாதிக்கப் பட்டு இருப்பார்கள் என்பது உண்மைதான் ஆனால் முழுப் பைத்தியமாக மாறுவார்கள் என்று அபிஷேக் ஐ பார்த்து புரிந்து கொண்டேன் பத்து நிமிட புகழுக்கு ஆசைப்பட்டு என்னா வாய் பேசுகிறார் ஈர வெங்காயம்... என பதிவிட்டுள்ளார்.
Recommended Video
இந்த வாரம் நீ தான்
மற்றொரு இணையவாசி, அபிஷேக்கு இந்த வாரம் நீ அதோ கதிதான்!.. சும்மா படம் காட்டாதே. என பதிவிட்டுள்ளார்.