Don't Miss!
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இன்றைய பிக் பாஸ் எபிசோடில் இந்த 10பேரும் சேவ்.. டேஞ்சர் ஸோனில் இருக்கும் அந்த 5 பேரு யாரு?
சென்னை: கமல்ஹாசன் கலந்து கொள்ளும் இன்றைய பிக் பாஸ் எபிசோடில் மொத்தம் 10 போட்டியாளர்கள் சேவ் ஆக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், டேஞ்சர் ஸோனில் உள்ள 5 போட்டியாளர்களில் ஒருவர் நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த போட்டியாளர் தான் வெளியேறுவார் என கெஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம் நிகழுமா? இல்லை அதே நபர் தான் எலிமினேட் ஆவாரா என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
படுக்கைக்கு அழைத்த இயக்குநர்.. பரபரப்பு புகார் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. எப்போ தெரியுமா?
15 பேரும்
யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 15 போட்டியாளர்களை பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்திலேயே எவிக்ஷனுக்கு கொண்டு வந்து ரசிகர்களிடம் 50 ஓட்டு கொடுக்காமல் வெறும் 10 ஓட்டுக்கள் மட்டுமே போட முடியும் என கைகளை கட்டிப்போட அதில் 10 பேர் ரசிகர்களின் ஆதரவோடு இன்றே காப்பாற்றப்படுகின்றனர்.
இந்த 10 பேர் சேவ்
பிரியங்கா, ராஜு ஜெயமோகன், அபிநய் வட்டி, வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, சிபி மற்றும் நிரூப் உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனிக்கிழமை எபிசோடிலேயே சேவ் ஆகி விட்டனர் என்கிற தகவல் கசிந்துள்ளது.
டேஞ்சர் ஸோனில் 5 பேர்
இசைவாணி, அபிஷேக் ராஜா, மதுமிதா, நாடியா சங் மற்றும் சின்னப் பொண்ணு உள்ளிட்ட 5 பேரும் டேஞ்சர் ஸோனில் உள்ளனர். நாளைய எபிசோடில் இதில் ஒருவர் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது உறுதியாகி உள்ளது.
சின்னப் பொண்ணு தானா
கடந்த சீசனில் ரேகாவை முதல் நபராக வெளியேற்றிய நிலையில், வயதான போட்டியாளரான சின்னப் பொண்ணுவை இந்த சீசனில் முதல் நபராக பிக் பாஸ் குழு வெளியேற்ற திட்டமிட்டு இருக்கும் என ஏற்கனவே ரசிகர்கள் கணித்து கமெண்ட்டுகளை பறக்க விட ஆரம்பித்து விட்டனர்.
ட்விஸ்ட் இருக்குமா?
இந்த விஷயம் ஒரு வாரமாகவே வலம் வரும் நிலையில், நிச்சயம் பிக் பாஸ் குழுவுக்கும் இது தெரிந்திருக்கும். அதன் காரணமாக இந்த சீசனில் முதல் நபராக சின்னப் பொண்ணுவை வெளியே அனுப்பாமல் நாடியா சங், அபிஷேக் ராஜா அல்லது மதுமிதா இந்த மூவரில் ஒருவரை வெளியேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கடைசி நேரத்தில் ட்விஸ்ட் இருக்குமா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.