Don't Miss!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஜால்ரானு சொல்றாங்க கேவலமா இல்லையா… நீ யாருனு காட்டு… பிரியங்காவை உசுப்பேத்தும் அபிஷேக் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றை எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் அபிஷேக் ராஜா, இந்த வாரமாவது நீ யாருனு காட்டு, தாமரை உன்னை கேவலமா பேசுவதை கேட்க எனக்கு கேவலமா இருக்கு என்று பிரியங்காவிடம் கூறுகிறார்.
விக்ரமின் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.... அடுத்த மாதத்தில் துவக்கம்
அபிஷேக் வழக்கமாக அங்கொன்றும் இக்கொன்றுமாக பேசுவார், கேட்டால் இது தான் கேம் ஸ்டேட்டர்ஜி என்று கூறுவார். அந்த வேலையை தற்போது பிரியங்காவிடமிருந்து தொடங்கி உள்ளார் அபிஷேக்.
பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. தலைவர் பதவிக்கு நேற்று நடைபெற்ற பருத்தி வீரன் டாஸ்கில் வெற்றி பெற்று பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவராக அபிநய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வைல்டு கார்டு என்ட்ரி
இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், போட்டியாளர்களுக்கு ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஹவுஸ்மேட்டுகள் அனைவரும், பள்ளி உடையில் தோன்றினார்கள். அந்த ப்ரோமோவில் ஒரு சீனில், புதிதாக ஒருவர் அமர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் கிஃப்ட் பாக்ஸில் இருந்து அபிஷேக் வந்த நிலையில் தற்போது மற்றுமொரு போட்டியாளர் வைல்டு கார்டு என்ட்ரியாக இன்று வருகை தந்துள்ளது முதல் புரமோவிலேயே லீக் ஆகி விட்டது. அவர் பெயர் அமீர் என்பதும் அவர் கொரியோகிராபர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
நீ யாரு காட்டு
தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் , தாமரை என்ன சொல்றாங்க, நீங்க மத்தவங்க கிட்ட காட்டுற அன்புல, சில பேர்தான் உண்மையாக இருக்காங்க, உன்னை விலைக்கு வாங்கிடலானு சொல்றாங்க, ஜால்ரானு சொல்றாங்க இந்த வாரத்தில் நீ யாருனு காட்டு, இதை எல்லாம் கேட்க எனக்கு கேவலமா இருக்கு என்று பிரியங்காவுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கிறார் அபிஷேக் ராஜா.
எனக்கு என்ன
தாமரைக்கோ ,இல்லை யாருக்கோ ப்ரூப் பண்றதுக்காக நான் இங்க வரல என்று பிரியங்கா அபிஷேக்கிடம் கூற, இதற்கு அபிஷேக் , எனக்கு என்ன நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ என்று கூறுகிறார். இதற்கு ரொம்ப சந்தோஷம் என்பதுபோல தாமரை சொல்லும் காட்சி ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.