Don't Miss!
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
ஜால்ரானு சொல்றாங்க கேவலமா இல்லையா… நீ யாருனு காட்டு… பிரியங்காவை உசுப்பேத்தும் அபிஷேக் !
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றை எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் அபிஷேக் ராஜா, இந்த வாரமாவது நீ யாருனு காட்டு, தாமரை உன்னை கேவலமா பேசுவதை கேட்க எனக்கு கேவலமா இருக்கு என்று பிரியங்காவிடம் கூறுகிறார்.
விக்ரமின் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.... அடுத்த மாதத்தில் துவக்கம்
அபிஷேக் வழக்கமாக அங்கொன்றும் இக்கொன்றுமாக பேசுவார், கேட்டால் இது தான் கேம் ஸ்டேட்டர்ஜி என்று கூறுவார். அந்த வேலையை தற்போது பிரியங்காவிடமிருந்து தொடங்கி உள்ளார் அபிஷேக்.
பிக் பாஸ் சீசன் 5
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. தலைவர் பதவிக்கு நேற்று நடைபெற்ற பருத்தி வீரன் டாஸ்கில் வெற்றி பெற்று பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவராக அபிநய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வைல்டு கார்டு என்ட்ரி
இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில், போட்டியாளர்களுக்கு ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஹவுஸ்மேட்டுகள் அனைவரும், பள்ளி உடையில் தோன்றினார்கள். அந்த ப்ரோமோவில் ஒரு சீனில், புதிதாக ஒருவர் அமர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் கிஃப்ட் பாக்ஸில் இருந்து அபிஷேக் வந்த நிலையில் தற்போது மற்றுமொரு போட்டியாளர் வைல்டு கார்டு என்ட்ரியாக இன்று வருகை தந்துள்ளது முதல் புரமோவிலேயே லீக் ஆகி விட்டது. அவர் பெயர் அமீர் என்பதும் அவர் கொரியோகிராபர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
நீ யாரு காட்டு
தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் , தாமரை என்ன சொல்றாங்க, நீங்க மத்தவங்க கிட்ட காட்டுற அன்புல, சில பேர்தான் உண்மையாக இருக்காங்க, உன்னை விலைக்கு வாங்கிடலானு சொல்றாங்க, ஜால்ரானு சொல்றாங்க இந்த வாரத்தில் நீ யாருனு காட்டு, இதை எல்லாம் கேட்க எனக்கு கேவலமா இருக்கு என்று பிரியங்காவுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கிறார் அபிஷேக் ராஜா.
எனக்கு என்ன
தாமரைக்கோ ,இல்லை யாருக்கோ ப்ரூப் பண்றதுக்காக நான் இங்க வரல என்று பிரியங்கா அபிஷேக்கிடம் கூற, இதற்கு அபிஷேக் , எனக்கு என்ன நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ என்று கூறுகிறார். இதற்கு ரொம்ப சந்தோஷம் என்பதுபோல தாமரை சொல்லும் காட்சி ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.