Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாவனி திங்க் ஸ்மார்ட்.... சஞ்சீவி திரும்ப திரும்ப சொன்னது இதற்காகத்தானா?
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பிக் பாசை பார்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு நாட்கள் நெருங்க நெருங்க அதிகரித்து வருகிறது.
தற்போது, பிக் பாஸ் வீட்டில், ராஜூ,நிரூப், சிபி, அமீர்,பாவனி, பிரியங்கா, தாமரை என 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 5 : சூட்கேஸ் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறும் போட்டியாளர் யார் ?
சூடுபிடித்தது
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 91 நாட்களை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடைசி வாரத்தின் பாதியில் ஒருவர் வெளியேறும் நிலைவரும், சூட்கேஸில் ஒரு பெரிய தொகை வைத்து இல்லத்திற்குள் அனுப்பப்படும். தன்னால் வெற்றியாளராக முடியாது என்னும் நபர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்.
டாப் 5 போட்டியாளர்கள்
இந்த வாரம் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படும். இதை யார் எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இந்த வாரம் ஒருவர் எலிமினேட் ஆகிவிடுவார் மற்றொருவர் பணப்பெட்டியுடன் வெளியேறிவிடுவார். எஞ்சி இருக்கும் 5 போட்டியாளர்களே டாப் 5 போட்டியாளராக இருப்பார்கள்.
பாவனி திங்க் ஸ்மார்ட்
நேற்று சஞ்ஜீவ் வெளியேறும் போது பாவனிக்கு சில அட்வைஸ்களை கொடுத்தார். அதில், பாவனி திங்க் ஸ்மார்ட் என்று கூறியிருந்தார். அந்த திங்க் ஸ்மார்ட் பின்னணியில் இருப்பது இந்த பணப்பெட்டிதான். தான் பிக்பாஸ் ஹவுசில் இருக்கும் போது ரூ.5 லட்சம் பணம் வந்தால் தாமரை அல்லது பாவனி எடுத்துச் செல்வார்கள், ஆனால் நான் வாய்ப்புக்கிடைத்தால் எடுத்துவிடுவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார் சஞ்சீவ்.
Recommended Video
பாவனிக்கு அறிவுரை
தற்போது அவர் வெளியேறியதால் பணப்பெட்டியை எடுத்துக்கொள்ளும்படி பாவனிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். ஏன் என்றால், ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் ஸ்ட்ராங் பிளேயராக இருக்கிறார்கள் இதனால் பைனல் வரை சென்றாலும் டைட்டிலை வெல்ல முடியாது இதை மனதில் வைத்துத்தான் சஞ்சீவி திரும்ப திரும்ப பாவனிக்கு திங்க் ஸ்மார்ட் என்று அறிவுரை கூறியுள்ளார்.