Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
42 நாட்களுக்கு நிவாஷினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள் !
சென்னை : பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிவாஷினி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. கடந்த சீசன்களைப் போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சீசனில் அறிமுகம் இல்லாதவர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் தெரிந்த முகங்கள் பலர் இருக்கின்றனர். இதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இரண்டு வாரத்திலேயே வெளியேறினார்.
இதெல்லாம் ஒரு ப்ரோமோவா?.. செம மொக்கையா இருக்கு..கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள்!
அசல் கோலார்
பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிகம் பேசப்படும் நபராக வலம் வந்தவர் அசல் கோலார். இன்டிபெண்டன்ட் இசையமைப்பாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த இவர், அதிகமாக பெண்களிடம் பேசி அவர்களிடம் ஓவராக வழிந்தார். வந்ததுமே குயின்ஸிக்கு ரூட்டு விட்ட அசல் கோலார் அவர் வொர்க் அவுட் ஆகாததால் நிவாஷினி பக்கம் தாவினார்.
கட்டிப்பிடிப்பது
நிவாஷினியை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பதுமாகவே இருந்தார். அதற்கு ஏற்றார்போல் அசலுடன் நெருங்கி பழகிய நிவாஷினி அவரை மடியில் படுக்க வைப்பது சாப்பாடு ஊட்டி விடுவது உள்ளிட்ட பல செயல்களை செய்தார். அசல் குறித்து ஆயிஷா நிவாஷினியிடம் சொன்னபோது கூட , ஆயிஷாவை நாமினேட் செய்து அசலுடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்தார் நிவாஷினி.
வெளியேறிய நிவாஷினி
அசல் கோலாரின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்த நிவாஷினி விளையாட்டில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அசல் கோலார் வெளியே சென்ற பிறகும் வீட்டி இருப்பவர்களிடம் பேசாமல் தனக்கு என்று இருக்கும் தனி உலகத்தில் வாழ்த்து வந்தார். இதையடுத்து நிவாஷினி குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத நிவாஷினி மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
எவ்வளவு சம்பளம் தெரியுமா?
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள நிவாஷினி வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நிவாஷினி ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 42 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிவாஷினிக்கு 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் சம்பளாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.