Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மோசமான போட்டியாளர்..சும்மா சீன் போடுறாரு..முகத்திற்கு நேரா ராமை கலாய்த்த தனலட்சுமி!
சென்னை : டிஆர்பி டாஸ்கில் மோசமாக விளையாடியது ராம் தான் என தனலட்சுமி கூறியதால் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த நான்கு வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் கூடிக்கொண்டே இருக்கிறது.
முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றப்படாத நிலையில் இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து தானாக வெளியேறினார். அடுத்ததாக குறைந்த வாக்குகளை பெற்று சாந்தி வெளியேறினார். கடந்த வாரம் அசல் கோலார் வெளியேற்றப்பட்டார்.
2 லட்சம் செலவு பண்ணி பிக்பாஸ் வீட்டில் தூங்க வந்த மாமனிதன்.. ராம் ராமசாமியை விளாசும் ரசிகர்கள்!
மகேஸ்வரி மோசமாக விளையாடினார்
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், டிஆர்பி டாக்கில் மிகவும் மோசமாக விளையாடிய போட்டியாளர் யார் என்று தேர்வு செய்து கூறுமாறு பிக் பாஸ் கூறுகிறார் அதற்கு அசீம் மகேஸ்வரி தான் மோசமாக விளையாடினார் என்கிறார். இதையடுத்து, ஏடிகே தனலட்சுமி பெயர் சொல்லி,அவர் தான் சுயநலத்தோடு விளையாடியது போல இருந்தது என்றார்.
ஜெயிலுக்கு போகும் ராம்
இதையடுத்து, வரும் தனலட்சுமி, டீமில் வேலையே செய்யாமல் இருந்தது ராம் தான், எந்த வேலை சொன்னாலும், உடனே கண் பிரச்சனையை காரணமா சொல்வது போல எனக்கு தெரிகிறது என்றார். இதனால், கடுப்பான ராம், ரீசன் என்னவோ அதை தெளிவாக சொல்லிட்டுபோ, தேவையே இல்லாமல் என் கண்ணுவிஷயத்தை பத்தி பேசாதே என்கிறார். மேலும், டாஸ்கில் வோஸ்டா செயல்பட்ட ராம் ஜெயிலுக்கு போவார் என்று பிக் பாஸ் கூறுகிறார்.
ராம்,ஜனனி சிறைக்கு போனார்கள்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் வாரத்திலேயே ராம் ஜெயிலுக்கு போனார். அடுத்ததாக ரேங்க் டாஸ்க்கின் போது அசீம், அயீஷா, விக்ரமனுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இந்த ரேங்க் வரிசையில் நிற்க ஆயிஷா, விக்ரமனுக்கு தகுதியே இல்லை என்று தொடங்கி, பின் நீ, வா,போ என்று ஆரம்பித்து இறுதியில் வாடா..போடா என்று முடிந்தது. இந்த டாஸ்கில் எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்த ராம் மற்றும் ஜனனி சிறையில் அடிக்கப்பட்டனர்.
ராம் பலமுறை சிறைக்கு போனார்
இதையடுத்து, இந்த வாரமும் மோசமாக விளையாடியதற்காக ராம் சிறைக்கு அனுப்பப்படுகிறார். இந்த பிக் பாஸ் சீசன் 6ல் அதிக முறை சிறைக்கு சென்ற ஒரே நபர் ராம் தான். கடந்த சீசனில், பாதாள சிறை இருந்த போதும் அது அவ்வளவாக பயன்படுத்தாமல் தான் இருந்தது.ஆனால், இந்த முறை அடிக்கடி போட்டியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.